Skip to main content

மொபைல் ஆப் மூலம் அந்தரங்கங்களை திருடி 80 பேருடன் உல்லாசமாக இருந்த ஸ்மார்ட்போன் சைக்கோ!!பெண்களே உஷார்!

Published on 01/08/2018 | Edited on 01/08/2018

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபரை பொதுமக்கள் அடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அது தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

 

ராமநாதபுரத்தை சேர்ந்த கணினி பொறியாளரான தினேஷ்குமார் 80 மேற்பட்ட பெண்களின் அந்தரங்க விவரங்களை ஸ்மார்ட் போன் ஆப் மூலம் தெரிந்துகொண்டு பெண்களை ஆசைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

 

SEXUAL ABUSE

 

 

 

அண்மையில் சொந்தகாரர் வீட்டிற்கு சென்ற தினேஷிடம் சொந்தகார பெண் ஒருவர் தன் கணவர் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து தரும்படி கேட்டு போனை நம்பி கொடுத்துள்ளார். அப்போது அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தினேஷ் அந்த மொபைலில் ஒரு ஹேக்கிங் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து தனது மொபைல் மூலம் அந்த பெண் மொபைலுக்கு வரும் போட்டோக்கள், விடியோக்கள், அலைப்பேச்சு பதிவுகள் போன்றவற்றை திருடி அதை லேப்டாப்பில் ஏற்றி அந்த பெண்ணிடம் தன் ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளான். இதைப்பற்றி தனது சகோதரனிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் போன்றே அவரது சகோதரன் தினேஷ்ற்கு குறுந்செய்தி அனுப்பி ஒரு இடத்தை குறிப்பிட்டு அந்த இடத்தில் யாரும் இல்லை நடமாட்டம் இருக்காது அங்கே வா என்று கூறியுள்ளார். அதனை நம்பி சென்ற தினேஷை கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.

 

SEXUAL ABUSE

 

 

 

இதனை அடுத்து அவனது வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 2 லேப்டாப், மூன்று ஸ்மார்ட் போன், பல பெண்களின் ஆடைகளை கைப்பற்றினர். மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தினேஷ் ஏற்கனவே ஒரு தனியார் கல்லூரியில் கணினி ஆய்வகத்தில் உதவியாளராக பணியாற்றும் பொழுது கல்லூரி மாணவிகளின் அந்தரங்க விவரங்களை இதேபோல் கைப்பற்றி அவர்களை ஆசைக்கு இணங்கும்படி தொந்தரவு செய்ய தர்ம அடி கொடுத்து துரத்தியுள்ளனர். 

 

 

அதன்பிறகும் இதுபோன்று பல பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களது உடைகளையும் சேகரித்துவைத்துள்ளான் அந்த ஸ்மார்ட் போன் சைக்கோ. அதைவிட கொடூரம் இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகபேர் சொந்தகார பெண்கள், சகோதர உறவுமுறை பெண்கள், நம்பி பழகிய தோழிகள் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை... ஸ்மார்ட் போன்களை மூன்றாம் நபரிடம் மட்டுலமல்ல நமக்கு தெரிந்த உறவுக்காரர்களிடம் கூட கொடுப்பதை பெண்கள்தவிர்க்க வேண்டும்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.