Skip to main content

ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி ஊர்வலம்!

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டியூஜே சார்பில் தேசத்திற்காக உயிரிழந்த இராணுவ வீரர்களின் வீர மரணத்திற்காக அஞ்சலி செலுத்தும் வகையில் மெளன ஊர்வலம் நடைபெற்றது.

 

 Anjali rally for soldiers

 

இந்த மெளன ஊர்வலத்தை மாநில துணை பொது செயலாளரும், மாவட்ட தலைவருமான இராமகிருஷ்ணன்  தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி  அமைதி  ஊர்வலத்தில்  கலந்து கொண்டனர்.

 

இந்த அமைதி ஊர்வலம் NGO காலனி உழவர்சந்தை அருகே தொடங்கி முக்கிய வீதிவழியாக மாவட்ட அலுவலகம் வந்தடைந்தது. 

 

 

அதன்பின்னர் அலுவலகம் முன்பு தேசத்திற்காக உயிர்தியாகம் செய்த 40 இந்திய ராணுவ வீரர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 

இந்த மௌன அஞ்சலி ஊர்வலத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சங்க வழக்கறிஞர் அருண்பிரசாத் கலந்து கொண்டார். அது போல் மாவட்ட பொருளாளர் குமார், அமைப்பு செயலாளர்குமரேசன், மாவட்ட நிர்வாகிகள் மணி, சிவபாரதி,பாலமுருகன்,முருகன், புருசோத்தமன்,ஒட்டன்சத்திரம் தாலூகா தலைவர் செல்லதுரை, மற்றும் வெங்கடேசன், சரவணன், வாசுதேவன், சபீக்,திருப்பதி, சையது, சௌந்தர், சரவணகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்