Skip to main content

ஈரோட்டு கோவில்களில் தொடர் உண்டியல் திருட்டு... போலீசார் விசாரணை!

Published on 01/01/2021 | Edited on 01/01/2021

 

temple

 

ஈரோடு ரங்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் காணிக்கையாக பணத்தைச் செலுத்திவந்தனர். 

 

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், இன்று ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டையொட்டி காலையில் சிறப்புப் பூஜை செய்வதற்காக, கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது, கோவிலின் இரண்டு பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி, உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த சில்வர் உண்டியல் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

 

உடனடியாக இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலுக்கு உடனடியாக வந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோயிலில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச் சென்றது தெரியவந்தது. உண்டியலில் ஆயிரக்கணக்கில் பணம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக உண்டியல் திறக்கப்படாததால் எவ்வளவு பணம் இருக்கிறது எனத் தெரியவில்லை.

 

தொடர் விசாரணையில் கோவிலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல் அந்த இடத்தின் அருகே உள்ள சடயம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு புதரில் கிடந்ததை தாலுகா போலீசார் கண்டுபிடித்தனர். உண்டியல் கிடந்த இடத்தின் அருகே ஒரு பையில் சில பண நோட்டுகளும் சிதறிக்கிடந்தது. உண்டியலையும் பணத்தையும் போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கொள்ளை நடந்த கோவில் அருகே  உள்ள  சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தில் கொள்ளையர்கள் உருவம் அதில் பதிவாகியிருக்கிறது. தற்பொழுது அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதேபோல் நேற்று முன்தினம் பழையப்பாளையம் ஓடை மேட்டில் உள்ள மதுரைவீரன், சக்தி மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். கோவில் உண்டியலை கொள்ளையடித்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த இரண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஒரே குழுவினர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கோயில் உண்டியல் கொள்ளை நடந்த இடத்தின் அருகாமையில்தான் தாலுகா காவல் நிலையம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.