Skip to main content

அதிரடி ஆக்‌ஷனில் அதிகாரிகள்...புகையிலை பொருட்கள் பறிமுதல்!!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

Seizure of tobacco products

 

திருச்சி மணிமண்டபம் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சுமார் 108 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்துள்ளனர். இதனை அறிந்த மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

 

அதில் அந்த வீட்டில் இருந்து குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வழக்கு போடுவதற்காக இரண்டு உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதே போல் மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், ‘தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்கள் கட்டாயம் விற்பனைக்கு வைத்திருக்கக் கூடாது என்றும், வைத்திருந்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்