Skip to main content

பேசியது ஸ்ரீமதியா...?-பள்ளி மாணவி விளக்கத்தால் பரபரப்பு!

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

schoolgirl dissatisfaction complaint

 

கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிற நிலையில் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த வருகின்றனர். அதேசமயம் சம்மந்தப்பட்ட பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் 3 பேரும், பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடந்து வருகிறது. மறுபுறம் காவல்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பள்ளியில் நடந்த கலவரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கலவரத்திற்கு காரணம் சமூகவலைத்தளங்களில் வெளியான தவறான தகவல்களே என கூறியுள்ள காவல்துறை, போலி செய்திகளை பரப்பிய சில யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட பல சமூகவலைதள பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

schoolgirl dissatisfaction complaint

 

இந்நிலையில் பள்ளி பேச்சு போட்டியில் அபாரமாக தமிழில் பேசும் வீடியோ ஒன்று உயிரிழந்த பள்ளி மாணவி பேசிய வீடியோ என தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில், போலியான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளி பேச்சு போட்டியில் அபாரமாக தமிழில் பேசும் வீடியோ ஒன்று பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது. 'இவ்வளவு தெளிவாக பேசும் மாணவி எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும்' என தலைப்பிட்டு அந்த வீடியோவானது பகிரப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 66 ஆயிரம் பேர் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை அறியாமல் வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஆனால் அந்த வீடியோவில் பேசுவது கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி அல்ல, கோவையைச் சேர்ந்த வேறு பள்ளி மாணவி என்பது தெரியவந்துள்ளது.

 

கோவை மாணவி இது குறித்து தெரிவிக்கையில், ''மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு ஏற்றுக்கொள்ளமுடியாதது. அவரது பிரிவை நினைத்து இன்று வரை நாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையை தவறா பயன்படுத்தி நான் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோக்களை அவர் பேசியதாக எடுத்து தவறாக பரப்பியுள்ளனர். நீங்கள் பல பெண் சாதனையாளர்களை, பெண் மேதைகளை உருவாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த சமூகத்தில் இன்னும் பல ஸ்ரீமதிகளை உருவாக்கி விடாதீர்கள் அதுவே போதும்'' என அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பரப்பியவர்கள் மீது கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரித்து வரும் போலீசார் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.