Skip to main content

“எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை..” - சசிகலாவின் உறவினர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

sasikala sister son baskar video goes viral

 

“நான் அவன் இல்லைங்க... எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல” என சசிகலாவின் சகோதரி மகன் வெளியிட்ட வீடியோ காட்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சசிகலா என்ற பெயர் தமிழக அரசியலில் பல ஆண்டு காலமாகவே பேசப்பட்டு வருகிறது. முதலில் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த சசிகலா., அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குச் சென்று நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சசிகலா., அவரது ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், அடுத்தடுத்து நடந்த அதிமுக உட்கட்சி பூசல்கள் சசிகலாவிற்கு பெரும் பின்னடைவாக மாறியது.

 

இந்நிலையில், சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் என்பவருக்கும் ஃபர்னிச்சர் தொழில் செய்துவரும் பாஸ்கர் என்பவரின் மகளுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, பாஸ்கரின் ஃபர்னிச்சர் கடையில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர போலீசுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், ஆந்திர போலீஸ் தலைமையில் பாஸ்கரின் ஃபர்னிச்சர் கடையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பாஸ்கரனின் கடையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

 

இதையடுத்து, பாஸ்கரை மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். ஆரம்பத்தில் சிறிய கடத்தல்களில் ஈடுபட்டு வந்த பாஸ்கர் அதன்பிறகு செம்மரக் கட்டைகளைக் கடத்தி வரத் தொடங்கியுள்ளார். மேலும், இந்த செம்மரக் கடத்தலை ரகசியமாக செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஃபர்னிச்சர் கடையை நடத்தி வந்திருக்கிறார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இந்நிலையில், சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரன் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "இன்னைக்கு காலைல ஒரு செய்திய கேள்விப்பட்டேன். செம்மரக் கட்டை வழக்குல சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டார்னு என்னோட போட்டோவ போட்டு இருந்தாங்க. அந்த பாஸ்கர் நா இல்ல. அது வேற பாஸ்கர். எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல" எனப் பேசியிருந்தார். தற்போது, ‘நான் அவர் இல்லை’ எனக்கூறும் பாஸ்கரின் வீடியோ காட்சி மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.