Skip to main content

"துரோகிகள் சேர்ந்து எங்கள வாழவிடலம்மா..."- சசிகலாவிடம் தொலைபேசியில் பேசிய அ.தி.மு.க நிர்வாகி!

Published on 06/06/2021 | Edited on 07/06/2021

 

sasikala continued telephone conversation with admk leader

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே சசிகலா அரசியல் துறவரம் செல்கிறார் என்று நக்கீரன் இதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார். அதே போல கடந்த வாரம் துறவரத்தில் இருந்த சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருகிறார் என்று நக்கீரன் இதழில் வெளியானது. 

 

இந்த நிலையில் சிறையில் இருந்த போது கடிதம் மூலம் தொடர்புக் கொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் சசிகலா பேசி வருகிறார். இது தொடர்பான ஆடியோவும் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "வருவேன்; அ.தி.மு.க.வை சரி செய்வேன்" என்று பேசும் அவரது பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்த உரையாடல் ஆடியோக்களைக் கேட்ட பிறகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சசிகலா கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார்.அ.ம.மு.க.வினரிடம் பேசுவதை அ.தி.மு.க.வினர் என்று சொல்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

 

இந்நிலையில் நேற்று (05/06/2021) அ.தி.மு.க.வின் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரண ஆறுமுகம் என்பவரிடம் சசிகலா தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது தொலைபேசியில் பேசிய பூரண ஆறுமுகம், "நான் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியது முதல் கட்சியில் இருக்கிறேன். தலைவரை நீக்கிய போதும், அம்மாவை சட்டமன்றத்தில் அவமானம் செய்த போதும் மறியல் செய்து சிறைக்கு போனவன். நீங்க சிறைக்கு போனப்பவும் அதே மனநிலையில் தான் இருந்தேன். நீங்க வெளியே வந்தப்ப வரவேற்று போஸ்டர் அடிச்சேன். ஆனால் 'துரோகிகள் சேர்ந்து எங்களை வாழவிடல' இப்ப கூட அ.ம.மு.க.வின் நகர செயலாளர் வீரமணி கூட நெருக்கமாக தான் இருக்கிறேன். என் மகன் செந்தில்குமார் அ.ம.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருக்கிறார். நீங்க கட்சிக்கு வரனும் கட்சியைக் காப்பாற்றனும்" என்று பேசினார்.

 

அதைத் தொடர்ந்து, அவரிடம் பேசிய சசிகலா, "நிச்சயம் வருவேன். கட்சியை சரி பண்ணி அம்மா (ஜெ) கொண்டு போனது போல செய்வேன். விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன். கட்சியை நல்லா கொண்டு போகனும். அதனால தான் ஆரம்ப கால கட்சிக்காரங்களிடம் பேசுறேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.