Skip to main content

சங்ககிரி பெண் சார் பதிவாளரிடம் கட்டுகட்டாக கையூட்டு பணம் பறிமுதல்! காவல்துறை அதிரடி!!

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

சங்ககிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், பெண் சார்பதிவாளரிடம் இருந்து கட்டுக்கட்டாக கையூட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் சங்ககிரி சந்தைப்பேட்டையில் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. சங்ககிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில் பத்திரப் பதிவு, திருமணப்பதிவு செய்யவும், வில்லங்க சான்றிதழ் பெறுதல் போன்ற பணிகளுக்காகவும் வந்து செல்வர்.

 

 Sankagiri woman confiscates money with registrar! Police Action !!

 

இதுபோன்ற சேவைகளைப் பெற வருவோரிடம் சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து கையூட்டு பெற்று வந்தனர். இதுகுறித்து சேலம் கையூட்டு ஒழிப்புப் பிரிவு காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (நவ. 1ம் தேதி) மாலை, கூடுதல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) சந்திரமவுலி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், சார்பதிவாளர் அலுவலகம் அருகே சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அலுவலகம் பூட்டும் நேரத்தில் அவர்கள் அனைவரும் திடீரென்று அலுவலகத்திற்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

பணியில் இருந்த சார்பதிவாளர் இந்திராகாந்தி, தலைமை எழுத்தர் ஜெகதீசன், இளநிலை உதவியாளர் உமா மகேஷ்வரி, கணினி இயக்குநர் சசிகலா, மனோஜ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். சார்பதிவாளர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்ததில் அதில் மதிய உணவு பாத்திரம் இருந்தது.

 

 Sankagiri woman confiscates money with registrar! Police Action !!


அந்த பாத்திரத்திற்குள் ரப்பர் பேண்டால் சுற்றப்பட்டு சிறு சிறு கட்டுகளாக பணம் இருந்தது. அவற்றைக் கைப்பற்றினர். எண்ணிப்பார்த்தபோது, 39500 ரூபாய் இருந்தது. மற்ற ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத 21500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தம் 61 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நாள்தோறும் சேரும் கையூட்டுத் தொகையை அவரவர் பதவி நிலைக்கு ஏற்ப, பணி முடிந்து வீடு திரும்பும்போது பங்கிட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

இதையடுத்து சார்பதிவாளர் இந்திராகாந்தி, மற்ற ஊழியர்களான ஜெகதீசன், உமாமாகேஷ்வரி, சசிகலா, மனோஜ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்களில் சார்பதிவாளர் இந்திராகாந்தி, ஏற்கனவே இதுபோல் கையூட்டு வழக்கில் பிடிபட்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சார்பதிவாளராக பணியாற்றியபோது, இதேபோன்ற வழக்கில் சிக்கியுள்ளார். அப்போது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இப்போதும், மீண்டும் அவர் லஞ்ச வழக்கில் சிக்கியிருப்பது அத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

கையும் களவுமாக பிடிபட்ட முன்னாள் ஆணையர்; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Ex-Corporation Commissioner sentenced to three years imprisonment in bribery case

வேலூர் மாநகராட்சி ஆணையராக ஆண்டு பணியாற்றி வந்தவர் குமார். இவர் சிலமாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் துணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெறும் சமயத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு குமார் வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் வேலூர் மாநகராட்சியில் கொசு ஒழிப்புக்காக மருந்து அடிக்கும் பணியும், வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியையும் ஒப்பந்தம் எடுத்து செய்துள்ளார்.

இதற்காக ரூ. 10 லட்சத்து 23 ஆயிரம் காசோலையை மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது எனக்கு 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரம் தர வேண்டும் என்று ஆணையர் குமார் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ஒப்பந்ததாரரை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தியதோடு பில் கிளியர் செய்வதை தாமதம் செய்துள்ளார். இதில் மனஉளைச்சலுக்கு ஆளான பாலாஜி ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார் என பாலாஜி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாலாஜியிடம் ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை கொடுத்து கமிஷனர் குமாரிடம் வழங்கும்படி தந்தனர். ஒப்பந்ததாரர் பாலாஜி ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 29.04.2024 ஆம் தேதி இவ்வழக்கில் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.