Skip to main content

சேலத்தில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு; 3 பேர் கைது

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

 

சேலம் அன்னதானப்பட்டி மணியனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (67). சில நாள்களுக்கு முன், அவர் தனது வீடு அருகே நடந்து சென்றபோது மர்ம நபர்கள் சிலர், கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

ro

 

இதுகுறித்து கிருஷ்ணவேணி, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் குமார் வழக்குப்பதிவு செய்தார். எஸ்எஸ்ஐகள் அன்பழகன், சம்பத் மற்றும் தலைமைக் காவலர்கள் செந்தில்குமார், விஜயகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர், சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். 


இதில், செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த இளவரசன் (20), திப்பம்பட்டி சங்கர்கணேஷ் என்கிற மன்னார் (21), சிவதாபுரத்தைச் சேர்ந்த யுவராஜ் (20) ஆகியோர்தான் மூதாட்டியிடம் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் தனிப்படை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. 


கைதான மூவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

நேரம் குறித்து கொடுத்த ஜோசியர்; போலீஸில் சிக்கிய கொள்ளையர்கள்

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Robbers caught by the police in maharashtra

 

மஹாராஷ்டிரா மாநிலம், பாராமதி, தியோக்கடே நகரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்றுள்ளார். அப்போது, இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய திருட்டு கும்பல், ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற திருட்டு கும்பல், தொழலதிபரின் மனைவியை மிரட்டி வீட்டில் இருந்த ரூ.95.30 லட்சம் ரொக்கம், ரூ.11 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்க நகைகள் மற்றும் மூன்று செல்போன்களைத் திருடிச் சென்றனர்.

 

அதன் பின்னர், வீட்டிற்கு திரும்பிய ரியல் எஸ்டேட் அதிபரும், அவருடைய மனைவியும் காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்தின் பேரில் சச்சின் ஜக்தனே (30), ரவீந்திர போசலே (27) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், அவர்கள் தான் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்கு சென்று திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன் பேரில், அவர்களிடம் இருந்து ரூ.60.97 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.76.32 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

இதையடுத்து, அந்த இருவரிடமும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த திருட்டு செயலில் இவர்கள் மட்டும் இல்லாது இன்னும் 3 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது. அதன் பேரில், பாராமதியைச் சேர்ந்த ரேபா சவான் (32), சதாராவைச் சேர்ந்த நிதின் மோரே (36), துரியோதன் ஜாதவ் (35), ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையில், இவர்கள் ஐந்து பேரும் பாராமதி எம்.ஐ.டியில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்.

 

இதற்கு மூளையாக செயல்பட்டவர் சதாராவைச் சேர்ந்த ராமசந்திரன் சவான் (43) என்ற ஜோசியர். மேலும், அவர் தான் இந்த திருட்டு செயலுக்கு நாள் பார்த்து குறித்து கொடுத்துள்ளார். அதன்படி ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை நல்ல நேரம் இருப்பதாக கூறியுள்ளார். அந்த சமயத்தில் அந்த வீட்டிற்கு சென்று திருடினால் யாரிடம் சிக்காமல் திருடி வந்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார். அதன் பேரில், தான் அந்த ஐந்து பேரும் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்கு சென்று திருடி தப்பித்துள்ளனர். அதன் பிறகு, இந்த திருட்டு சம்பவம் நல்லபடியாக முடிந்ததால், ஜோசியருக்கு ரூ.8 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று தெரியவந்தது. தற்போது, ஜோசியரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

Next Story

வேலூர் நகைக்கடை கொள்ளை சம்பவம்... ஒருவர் கைது!

Published on 19/12/2021 | Edited on 19/12/2021

 

Vellore jewelery robbery incident ...

 

கடந்த 15ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள தனியார் நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில், கடையின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் நகைகளை திருடிய சம்பவம் நடைபெற்றிருந்தது. இதுதொடர்பாக போலீசார் 8 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அக்கடையில் 15 கிலோ தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானது. கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தது.  

 

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அணைக்கட்டு பகுதியை அடுத்த குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த டி.கா.ராமன் என்ற 28 வயது இளைஞரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.