Published on 19/09/2020 | Edited on 19/09/2020
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது, கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணிக்கு உயிரிழந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.