Skip to main content

நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்

Published on 14/06/2025 | Edited on 14/06/2025
nn

நீலகிரிக்கு இன்றும் நாளையும் அதிக கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் மழைபொழிந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இன்றும் நாளையும் நெல்லை நீலகிரி மாவட்டத்திற்கு அதித கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

 கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேபோல நாளை (15/06/2025) 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, சேலம், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரியில் சுற்றுலா தளங்களுக்கும் ரெட் அலர்ட் காரணமாக  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16 ஆம் தேதி தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்