Skip to main content

பட்டியல் போட்டு லஞ்சம் வசூல்! கிருஷ்ணகிரி கல்வி அலுவலக ஊழியர் கைது!!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
 Put the list and collect the bribe! Krishnagiri education office employee arrested

 

 

கிருஷ்ணகிரி அருகே, பணப்பலன்கள் தொடர்பான கோப்புகளை சரிபார்க்க பட்டியல் போட்டு லஞ்ச வேட்டையாடி வந்த வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஐடிஐ அருகே வசித்து வந்தவர் ராமையா. கெலமங்கலம் அருகே அனுசோனை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதையடுத்து, ராமையாவின் பணப்பலன்களைப் பெறுவதற்காக அவருடைய மகன் கிஷோர்குமார் (28), கெலமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். நீண்ட காலமாக அவருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இதனால் அவர், அந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி (50) என்பவரை நேரில் சந்தித்து முறையிட்டார்.

 

அப்போது பாலாஜி, தனக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், உடனடியாக பணப்பலன்கள் பெற்றுத்தருவதற்கான வேலைகள் செய்து தரப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு பணம் தருவதாக அப்போது ஒப்புக்கொண்ட கிஷோர்குமார், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் அறிவுறுத்தலின்பேரில் ரசாயன பவுடர் தடப்பட்ட 5 ஆயிரம் ரூபாயை எடுத்துச்சென்று பாலாஜியிடம் ஆக. 12ம் தேதி கொடுத்தார். அந்தப் பணத்தை பாலாஜி கையில் வாங்கும்போது, அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

 Put the list and collect the bribe! Krishnagiri education office employee arrested


கெலமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலாஜி மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புப்பிரிவுக்கு தொடர்ந்து ஊழல் புகார்கள் சென்றன. தற்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் பெற்றுத்தருதல், வாரிசு வேலைக்கான கோப்புகளை தயார் செய்தல், மருத்துவ விடுப்பு ஆவணங்களை சரி செய்தல் என ஒவ்வொரு பணிக்கும் சேவைக்கட்டணம் போல் பட்டியல் போட்டு பாலாஜி லஞ்சம் வசூலித்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

 

லஞ்சப்பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு போகிறது? என்பது குறித்து விசாரித்தனர். இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட சிறையில் நீடிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.