Skip to main content

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை.

Published on 06/10/2019 | Edited on 06/10/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்கள் போதைக்காக மதுக்கடைகளுக்கு செல்வதை விட மாற்று போதைக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து போதைக்காக மாத்திரைகள், ஊசிகளை விற்பனை செய்வதும், கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் புதுக்கோட்டையில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது போதைக்காக பயன்படுத்தும் ஏராளமான ஊசி மருந்துகள், மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார், அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் விலை உயர்ந்த ஊசி மருந்துகளை முக்கிய புள்ளிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. 

pudukkottai alcohol tablet sales police arrested in women

நகரங்களை கடந்து கிராமங்களுக்குள்ளும் பள்ளி மாணவர்கள் வரை. இந்த மாற்றுப் போதை நோயாக பரவியுள்ளது. இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் போதைக்காக மாத்திரைகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து டிஎஸ்பி கோகிலா தலைமையில் தனிப்படை அமைத்து ரகசியமாக ஆய்வுகள் செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு அரசர்குளம் பகுதியில் ஜெகன்(35), ரியாஸ் (38) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் மாற்றுப் போதைக்காக கிராமத்து  இளைஞர்களை குறிவைத்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்வது அறிந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட  விசாரணையில் தங்களுக்கு வேறு சிலர் மாத்திரைகள் கொடுக்கிறார்கள் என்றும், அந்த நபர்களை பற்றியும் தகவல் கொடுத்துள்ளனர்.

pudukkottai alcohol tablet sales police arrested in women


இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் நேற்று அதிகாலையில் திருப்பூர் பகுதியில் மறைந்திருந்த வாசு (40), பானுமதி (42), வினோத் (30), கெளதம்ராஜா (38) ஆகிய 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அறந்தாங்கி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். இவர்களிடமிருந்து 2500  போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ 3 லட்சத்தி 75 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.