Skip to main content

மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறார்; எடப்பாடியைத் திட்டுகிறார்! - அ.தி.மு.க. அமைச்சரின் வாய்ஸ் எடிட்டிங் வீடியோ! 

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

MK Stalin praises; Edappadi scolds - AIADMK Minister's Voice Editing Video!

 

அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர், ‘உழைக்கத் தெரிந்த உத்தமர் ஸ்டாலின் மட்டும்தான்’ எனப் பாராட்டுவது போலவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் திட்டுவது போலவும், அமைச்சர் வாய்ஸிலேயே வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

  
ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள்தான், இந்த எடிட்டிங் வேலையைச் செய்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், சந்தேகப் பார்வை எதிர்க்கட்சியினர் மேல் விழுவதைத் தவிர்க்க முடியாது.


ஆபாசப் புகைப்படங்களில் நடிகைகளின் தலையை ‘மார்ஃபிங்’ செய்து, அந்த நடிகைகளைக் கெட்டவர்கள் போல் சித்தரிப்பது வாடிக்கையாக நடந்துவருகிறது. அதுபோன்ற ஒரு செயல்தான், அரசியல் தலைவர்களின் சொந்தக் குரலையே, கன்னாபின்னாவென்று எடிட் செய்து, அவர்களை ‘டேமேஜ்’ செய்வதும்.

 
மீம்ஸ் காமெடியின் அடுத்த கட்டமாக, இதுபோன்ற வீடியோக்கள் வரத்துவங்கியிருப்பது ஆபத்தானது. ‘அந்த அமைச்சர் அப்படிப் பேசக்கூடியவர்தான்.. பேசினாலும் பேசியிருப்பார்.. போதையில் அப்படிப் பேசியிருப்பாரோ?’ என்று, இத்தகைய ‘வாய்ஸ் எடிட்டிங் வீடியோக்கள்’ சாமானியர்களை நம்பவைத்துவிடும்.


‘நாங்களும் பதிலடி தருகிறோம்..’ என்று ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினருக்கு எதிராக, குயுக்தி மனப்பான்மையோடு கிளம்பினால் என்னவாகும்? மு.க.ஸ்டாலினை உதயநிதி விமர்சிப்பது போலவும், அவரே எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டுவது போலவும், உதயநிதியின் சொந்தக் குரலிலேயே ‘எடிட்டிங் வீடியோக்கள்’ வெளிவரும். அரசியலில் இதுபோன்ற அநாகரிக கலாச்சாரம் வேர்விடும்.  

 

அதேபோல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை அனந்தலை, பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகையை ரூ.5,000 ஆக கொடுக்க வேண்டும் என்று அதற்கு கணக்கும் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்திருந்தது, “தற்போதைய பொங்கல் பரிசு ரூ.2,500 + கரோனா நிதி ரூ.1,000. கூடுதலாக ரூ.5,000 -க்கு இன்னும் எவ்வளவு இருக்கிறது ரூ.1,500 எனக் கூறியிருப்பார்”. இதன்கடைசி பகுதியை மட்டும் எடிட் செய்து ஸ்டாலினின் கணக்கு ரூ.2,500 + ரூ.1,000 மொத்தம் ரூ.5,000 என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.


‘சிரித்துவைப்போம்’ என்று சமூகம் இதனை அனுமதித்தால், காலம் சென்ற அரசியல் தலைவர்களையும், வாய்ஸ் எடிட்டிங் பேர்வழிகள் விட்டுவைக்க மாட்டார்கள். இதுவும் ஒருவிதமான வன்முறையே!
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.