Skip to main content

மக்களை ஏமாற்றி  ஒரு கோடி மோசடி!  போஸ்ட் ஆபீஸ் பெண் ஊழியர் தற்கொலை!!

Published on 01/12/2018 | Edited on 01/12/2018
p

 

இந்தியாவில் உள்ள அனைத்து பொறுப்புகளிலும் சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.  அப்பகுதிகளில் உள்ள மக்களும் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்து வருகிறார்கள்.  அதுபோலதான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில்  இருக்கும் கீரனூர் போஸ்ட் ஆபீசில் அப்பகுதியில் உள்ள கீரனூர்,  கீரனூர் மேல் கட்டி,  தொப்பம்பட்டி,  கவுண்டன் வலசு உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் விவசாயிகளும் நூறு ரூபா முதல் 3000 வரை இந்த கீரனூர் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பணம் போட்டு வந்தனர்.

 

 இந்த பணத்தை போஸ்ட் ஆபீஸில் கலெக்ஷன் பிரிவில்  வேலை பார்க்கும்  பிரேமாவிடம்  கொடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  பட்டி அருகே உள்ள காட்டு பகுதியில் பிரேமா விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார்.
    இந்த விஷயம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரியவே உடனே கீரனூர் போலீஸ்க்கு தகவல் கொடுத்ததின் பேரில் பிரேமாவின்  சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்
.

   இந்த நிலையில் தான் பிரேமா மூலம் போஸ்ட் ஆபீஸ் சில் பணம் போட்டு வந்தவர்கள் திடீரென கீரனூரில் உள்ள போஸ்ட் ஆபீஸ் க்கு post ஆபீசுக்கு சென்று சென்று தங்கள் கட்டிய  பணம் சரியாக இருக்கிறதா என்று பாஸ்புக் கை கொண்டு போய் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து விட்டனர்.


இது பற்றி அப்பகுதியில் உள்ள சிலரிடம் கேட்டபோது....  கீரனூர் போஸ்ட் ஆபீஸ் சில் கலெக்ஷன் பிரிவில் வேலைப்பார்த்து வந்த பிரேமா தினசரி சிறுசேமிப்பில் சேர்ந்த மக்களிடம் வீட்டுக்கும், தோட்டம் காடுகளில் வசிக்கும் விவசாயமக்களிடமும்
 நேரடியாக சென்று சிறு சேமிப்பு பணத்தை வாங்கி கொண்டு பாஸ்புக் கில் வரவு வைத்து  விட்டு ஆபீஸ் போய் உங்கள் கணக்கிலும்  வரவு வைக்கப்படும் என்று பிரேமா கூறி செல்வார். அதை நம்பி மக்களும் பணம் கொடுத்து வந்தனர்.

 

 இந்த நிலையில் பிரேமா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள் போஸ்ட் ஆபீஸ் உள்ள எங்கள் கணக்கை சரிபார்த்த போது நாங்கள் கொடுத்த பணத்திற்கு அங்குள்ள கணக்குக்கும் ஆயிரக்கணக்கில் விடுதலை ஆகி இருந்தது.  அதாவது ஒவ்வொருத்தருக்கும் 10,000 முதல் 60 வரை பணம் கட்டியும் கூட அந்த பணத்தை முறையாக இந்த பிரேமா போஸ்ட் ஆபீசில் கொடுத்து வரவு வைக்காமலேயே மோசடி செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது.  அதன்பேரில் இப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்டவர்கள் கட்டிய சிறு சேமிப்பு பணத்தில் ஒரு கோடி வரை மோசடி செய்து இருக்கிறார் என்று தெரிகிறது.  இதுபற்றி போஸ்ட் ஆபீசில் கேட்டால் கணக்கில் வரவு இருந்தால் தான் பணம் கிடைக்குமே தவிர பாஸ்புக் கில் உள்ள பணம் எல்லாம் கிடைக்காது.  உங்களிடம் பணம் வாங்கி கொண்டு இங்கு வரவு வைக்கவில்லை. அப்படி இருக்கும் போது அதை எப்படி போஸ்ட் ஆபீஸ் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறி கைவிரித்து வருகிறார்கள்.    அதோடு போலீஸ் ஸ்டேஷனில்  கேட்டாலும் சரியான பதில் இல்லை.  

 

இதனால் சிறு சேமிப்பு பணம் போட்ட அப்பாவி பொதுமக்களாகிய எங்களை போல் பலர் கஷ்டப்பட்டு  கட்டிய பணம் பணத்தை பறிகொடுத்து விட்டு தவித்து வருகிறோம் என்று வருத்தத்துடன் கூறினார்.  இச் சம்பவம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்பையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்; 12 மணி நேரம் செயல்படும் மத்திய அரசு நிறுவனம்!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

following mumbai in tamilnadu central government agency that operates for 12 hours
கோப்பு படம்

 

தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் ஒரு தகவலை ஒரே நிமிடத்தில் உலகின் எதிர் திசையில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. ஆனால், உலகமயமாக்கல் நிகழ்வதற்கு முன்பு வரை ஒரு தகவலை அடுத்த மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பதே பெரும் காரியமாக இருந்து வந்தது. அந்தக் காலங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தது தபால் துறை. அரசுத் துறையான தபால் துறை தொலைத்தொடர்பு வசதிகள் பெருகத் தகவல் பரிமாற்றத்தில் தேக்கம் கண்டது. ஆனால், மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்ப மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை எளிதாக்க பல்வேறு முயற்சிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இணைய வங்கி சேவை, காப்பீடு வழங்குதல் போன்றவற்றை முன்னெடுத்து வருகிறது.

 

சமீபத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலைத் திட்டம் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசு இந்த 12 மணி நேர வேலைத் திட்டத்தை முன்னெடுக்கத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 தபால் நிலையங்களில் 12 மணி நேரச் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்  முறையாக பகல் 12 மணி நேரமும் செயல்படும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் தபால் நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த தபால் நிலையமானது காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

 

மேலும் வங்கி பரிவர்த்தனை சேவைகளான சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு,  மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் காப்பீட்டு பரிவர்த்தனைகள், தபால் சேவையில் பதிவு தபால், விரைவு தபால், பார்சல் சேவைகள், அயல்நாட்டு தபால் சேவை, விபிஎல், விபிபி தபால் சேவைகள், மணியார்டர் போன்ற சேவைகளும் 12 மணி நேரமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பெருகும் ஆதரவு; களத்திற்கு வந்த அமைப்புகள்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

indian wrestlers related issue some organisation support trichy

 

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று தந்த மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை பதவி நீக்கம் செய்வதுடன், அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இதன் தொடர்ச்சியாக, திருச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இணைந்து இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரும்பு தடுப்புகளை தாண்டி தபால் நிலையத்துக்கு உள்ளே செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

 

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் பாஜக எம்.பியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விவசாயிகளைப் பாதுகாக்க விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டுமெனவும் பெண்களைப் பாதுகாக்க குற்றவாளிகளுக்கு துணைபோகாமல் தண்டிக்க வேண்டுமெனவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர்.