Skip to main content

சிப்காட் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய காவல்துறையினர்... முக்கிய அறிவுறுத்தலை வழங்கிய எஸ்.பி!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021
The police who consulted with the owners of the sipcot company ... SP who gave the important instruction

 

ஈரோடு மாவட்டத்தில் பல நிறுவனங்கள், ஏராளமான தொழிற் சாலைகள்செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கில் வடமாநிலத்தை சேர்தவர்கள் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து இங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பெருந்துறை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் செயல்படுகிறது. அதில் பல ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் வேலை செய்கின்றனர். இதில் அவர்களின் சொந்த மாநிலத்தில் குற்றப்பின்னணி உள்ளவர்களும் உள்ளார்கள். அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவ்வப்போது போலீசார் கைது செய்து வருகின்றனர். சமீபத்தில்  ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அந்தந்த தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் பற்றிய முழு விவரம் அவர்களின் பின்னணி குறித்து முழுவதுமாக தெரிந்த பின்னேரே  பணியில் அமர்த்த வேண்டும் என போலீசார் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அறிவித்திருந்தனர்.

 

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையடுத்த பணிக்கம்பாளையம் கியாஸ் குடோனில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வங்க தேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சோதனை நடத்தினார். அப்போது வங்க தேசத்தை சேர்ந்த 52 வயது முகமது மொட்டி ரகுமான், 40 வயது முகமது சொராத் காஜி, 20 வயது ரபூல் காஜி, 43 வயது முகமது மோக்சத் அலி மேலும் முகமது அன்சாரி, ரகுமான்,மொனி ரூல் இஸ்லாம் , முகமது சபிக்குல் இஸ்லாம், முகமது அஸ்ரம் உஸ்மான், ஹாரிபுல் இஸ்லாம், சபுல்இஸ்லாம்  ஆகிய 10 பேர் தங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அனைவரும் வேலை தேடி முதலில் சட்டவிரோதமாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்று அங்கு சில மாதங்கள் தங்கி கட்டிட வேலை பார்த்தது தெரியவந்தது. 

 

அதன் பின்னர் அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் ரயில் மூலம் ஈரோடு வந்து பிறகு  பெருந்துறை மணிக்கம் பாளையத்திற்கு வந்துள்ளனர்.  கட்டிட தொழிலாளியாக பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இவர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தனித் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் சட்டவிரோதமாக இங்கு வந்து வேலை பார்த்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் பாஸ்போர்ட் , விசா போன்ற முறையான எந்த ஆவணங்களும் இல்லை.  பிறகு அவர்கள் பத்து பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டவர்கள் யாராவது சட்டவிரோதமாக வேலை செய்து வருகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தொழிற்சாலைகளுக்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.