Skip to main content

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு மெரினாவில் தடை போலீசார் குவிப்பு

Published on 20/05/2018 | Edited on 20/05/2018

சென்னை மெரினாவில் சுமார் ஆயிரம் எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009-ஆம் ஆண்டு மே 18 இனப்படுகொலை செய்யட்ட லட்சக்கணக்கான தமிழகர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவந்தது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் இனி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என 41 எ சட்டப்பிரிவின் படி மெரினாவில் போராட்டம் நடத்த தடை உத்தரவை தமிழக அரசு வாங்கியுள்ளது.

 

may17

 

தற்போது நேற்று மே பதினேழு இயக்கமும் மற்றும் வைகோ உட்பட பதினோரு அமைப்புகளை சேர்ந்தவர்களும் நாளை திட்டமிட்டபடி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடக்கும் என அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து தற்போது தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி  நினைவேந்தல் நடத்தப்படலாம் என்பதால் முன் எச்சரிக்கைக்காக தடுப்பதற்கு சுமார் ஆயிரம் போலீசார் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

அதுமட்டுமின்றி தடையைமீறி குவியும் கூட்டத்தை கைது செய்ய சுமார் 20 மாநகர பேருந்துகளும், தடுப்புக்களும் ரெடியாக வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினாவில் சீறிப் பாய்ந்த சொகுசு கார்கள்! மடக்கி பிடித்த போலீஸ் 

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

Luxury cars in the marina! The police who got wrapped up

 

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டதாக அதிநவீன சொகுசு கார்களை சென்னை போக்குவரத்து போலீஸார் பிடித்து அபராதம் விதித்தனர்.  

 

சென்னையைச் சேர்ந்த தனியார் கார் பராமரிப்பு நிறுவனம் தனது நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சிக்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்த சொகுசு கார்களை சென்னைக்கு எடுத்துவந்தது. அந்த கார்களின் அணிவகுப்பு இன்று காலை சென்னை ஈ.சி.ஆரில் நடந்தது முடிந்தது. அதன்பிறகு அதில் ஆறு சொகுசு கார்கள், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சீறிப் பாய்ந்தன. இதனைக் கண்ட காமராஜர் சாலையில் போக்குவரத்து கண்காணிப்பில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தி பிறகு அனைத்து கார்களுக்கும் அபராதம் விதித்தனர். 

 

பிடிப்பட்ட கார்களை காவல்துறையினர் காமராஜர் சாலையில் வரிசையாக நிறுத்தி வைத்தனர். இதனைக் கண்டு அங்கிருந்த மக்கள் அந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

 

 

Next Story

பரவிய வதந்தி... மெரினாவில் போலீசார் குவிப்பு!

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

Re-mortem of the student's body... Police gathering in Marina!

 

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இந்த சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 329 பேரில் 108 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளி தரப்பில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள், தாளாளர், செயலாளர், ஆசிரியைகள் உள்ளிட்ட ஐந்து பேரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

மாணவி உயிரிழப்பு தொடர்பாக  தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் மறு  பிரேதப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது இதற்காக மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் கீதாஞ்சலி (விழுப்புரம்), கோகுலநாதன்( சேலம்), ஜூலியான ஜெயந்தி (திருச்சி), ஓய்வுபெற்ற தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக வதந்திகள் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் பாதுகாப்பிற்காக 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.