Skip to main content

பெற்றோர்களை கொன்று சாக்குமூட்டையில் கட்டிய மனநோயாளி!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020
Perambalur



பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம்  கிராமத்தை சேர்ந்த 63 வயதுள்ள ராமசாமி, 58 வயதுள்ள செல்லம்மாள்.  கணவன்- மனைவியான இவர்களது  மகன் 27 வயது ரமேஷ்.  இவர் மனநிலை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்காக தொடர் சிகிச்சை மூலம் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார்.  இவருக்கு திருமணமாகி தங்கமணி என்ற மனைவியும், இரண்டு ஆண், ஒரு பெண் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.


ரமேஷ் மனநிலை சரி இல்லாமல் அவ்வப்போது குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்ததால், இவரது மனைவி கணவரிடம் சரிவர பேசுவது இல்லை.  கணவரிடம் இருந்து ஒதுங்கி இருந்துள்ளார்.  இந்த நிலையில் ரமேஷ் சமீபத்தில் விவசாய கிணற்றில் விழுந்து காலில் அடிபட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.  இதனால் ரமேஷ் மனநோய் காரணமாக  குடும்பத்தில் ஒரு பிடிப்பு இல்லாமல் விரக்தியான மனநிலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் இருந்த அவரது தந்தை ராமசாமி, தாய் செல்லம்மாள் ஆகிய இருவரும் நீண்ட நேரமாக அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதைக்கண்டு சந்தேகமடைந்த ரமேஷ் மனைவி தங்கமணி,  மாமனார் - மாமியார் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது,  அங்கு சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து ஓடியுள்ளது. இதைக் கண்டு திடுக்கிட்ட தங்கமணி அக்கம்பக்கத்தினர்களிடம் சொல்ல,  அவர்கள் சென்று பார்த்தபோது ராமசாமியும் அவரது மனைவி செல்லம்மாளும் சாக்குமூட்டையில் பிணமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

 

 


உடனடியாக பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  காவல்துறையினர் அங்கு வந்தபோது மன நோயாளியான ரமேஷ் வீட்டின்  மொட்டை மாடியில் ஏறி நின்று கொண்டு கத்தியைக் காட்டி தன்னைத் தானே வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டிக் கொண்டிருந்துள்ளார்.  அவரை போலீசார் நயந்து பேசி கீழே கொண்டு வந்தனர்.  தன் தந்தை, தாயை வெட்டிக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டிய மனநோயாளி மகனின் கொடூர செயலை கண்டு லாடபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

தாய், தந்தையை கொலை செய்த மனநோயாளி ரமேஷ் எந்தவித பதற்றமும் இல்லாமல் இருந்துள்ளார்.   அவரை போலீசார் கைது செய்து, மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உன்னையே நம்பியிருக்கும் என்னை நீ கைவிட்டு விடக்கூடாது”-வற்புறுத்திய காதலியை அடித்துக்கொலை செய்த காதலன்! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

The boyfriend who beat his girlfriend

 

பெரம்பலூர் மாவட்டம், அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா(43). சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து போய்விட்டார். இவரது மகன், மகள் ஆகிய இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். புஷ்பா தனது தாய் பெருமாயி என்பவருடன் மேட்டூரில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் புஷ்பா கடந்த 7ஆம் தேதி அரும்பாவூர் வரை சென்று வருவதாகத் தனது தாய் பெருமாயிடம் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மகள் வீட்டுக்கு வரவில்லையே என்று  தவித்துப் போன தாய் பெருமாயி தனது மகள் புஷ்பாவை பல்வேறு இடங்களுக்கும் சென்று தேடிப் பார்த்துவிட்டு அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் புஷ்பாவை பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர்.

 

இந்த நிலையில் அன்னமங்கலம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் அறிந்த போலீசார் அன்னமங்கலம் காட்டுப்பகுதிக்குச்சென்று அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றினர். மேலும் தனது மகள் புஷ்பாவை காணவில்லை என்று தங்களிடம் புகார் அளித்த பெருமாயியை அழைத்துச் சென்று அந்த உடலைக் காட்டியுள்ளனர். அது காணாமல் போன தனது மகள் புஷ்பா தான் என்று அடையாளம் காட்டியுள்ளார் பெருமாயி. இதையடுத்து புஷ்பாவின் கொலை குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையின் மூலம் புஷ்பாவின் ஊரான மேட்டூரை சேர்ந்த 45 வயது சோலைமுத்து என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கும் கணவர் இல்லாமல் இருந்து வந்த புஷ்பாவுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

 

இந்த நிலையில் சம்பவத்தன்று அன்னமங்கலம் வனப்பகுதியில் சோலைமுத்து மற்றும் புஷ்பாவும் சந்தித்துள்ளனர். அப்போது புஷ்பா, சோலைமுத்துவிடம் உன்னையே நம்பியிருக்கும் என்னை நீ கை விட்டு விடக்கூடாது, எனவே நீ என்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். திருமணத்திற்கு மறுத்துள்ளார் சோலைமுத்து. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றி உள்ளது. கடும் கோபத்தில் சோலைமுத்து புஷ்பாவை கல்லால் அடித்துக்கொலைசெய்து அந்த இடத்திலேயே போட்டுவிட்டு புஷ்பா வைத்திருந்த 25ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்து உள்ளார் சோலைமுத்து. அவரை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். காதலியைக் கொலை செய்து போட்டு விட்டுச் சென்ற காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

Next Story

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த தம்பதி... பதறிய மகன் மற்றும் உறவினர்கள்!! 

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

The couple lying in a decapitated position; shocked son and relatives

 

பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது அல்லி நகரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயது பெரியசாமி மற்றும் அவரது 48 வயது மனைவி. இவர்களது மகன் மருத்துவம் படித்துவிட்டு, பணியின் காரணமாக சென்னையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். பெரியசாமியும், அவரது மனைவி ஆகிய இருவர் மட்டும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு அல்லி நகரத்திலேயே வசித்துவந்துள்ளனர். இவர்களது மகன் முருகானந்தம் சென்னையில் இருந்தாலும், தினசரி காலை மாலை தனது பெற்றோருடன் செல்ஃபோன் மூலம் பேசி விசாரித்துவருவது வழக்கம்.

 

அதன்படி நேற்று (08.06.2021) காலை சென்னையிலிருந்து முருகானந்தம் தாய், தந்தையுடன் பேசுவதற்காக செல்ஃபோனில் தொடர்புகொண்டுள்ளார். ஃபோனை எடுத்து யாரும் பேசவில்லை. மீண்டும் ஒருமுறை தொடர்புகொண்டும் அவர்கள் ஃபோனை எடுத்துப் பேசவில்லை. நீண்டநேரம் முயற்சி செய்தும் தாய், தந்தை இருவரும் பேசாததால் அதிர்ச்சியடைந்த முருகானந்தம், அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஃபோன் செய்துள்ளார். தனது தாய், தந்தை இருவருமே பலமுறை ஃபோன் செய்தும் செல்ஃபோனை எடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே உடனடியாக எங்கள் வீட்டிற்குச் சென்று பார்த்து தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவரது உறவினர் அவரது தாய், தந்தை வசித்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த வீட்டில் பெரியசாமியும் அவரது மனைவியும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். பதறிப்போன அவர்களது உறவினர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்குத் தகவல் சொல்லியதோடு, உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த கணவன், மனைவி இருவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கணவன், மனைவி இருவரையும் கழுத்தறுத்து கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, நகை மற்றும் பணத்திற்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு கணவன், மனைவி இருவரும் இரவு நேரத்தில் வீட்டில் கொலை செய்யப்பட்டது குறித்து வேறு ஏதேனும் காரணம் உண்டா, கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்காக கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அப்படி இருந்தும் குற்றவாளிகள் யார் என்று இதுவரை தெரியவில்லை. மாவட்டக் காவல்துறை அதிகாரி, தனிப்படை அமைத்து கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவருகிறார்கள்.