Skip to main content

நலிவடைந்த "பேனா நிப்புகள்" தயாரிக்கும் தொழிலாளர்களை கண்டு கொள்ளாத தமிழக அரசு!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

போருக்குச் செல்லும் வீரர்கள் ஏந்திச்செல்லும் ஆயுதங்களைப் போல, பாடசாலையில் கல்விக்கற்கச் செல்லும் அனைவரும் தங்கள் இதயத்தில் சுமந்துச் செல்வது பேனாவை மட்டுமே. நம் முன்னோர்கள் தங்கள் மனதில் தோன்றும் சிந்தனைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க பயன்படுத்தியதே எழுத்து. ஒரு குடும்பத்தில் ஒருவராவது கல்வி கற்றால் அக்குடும்பமே தலைநிமிர்ந்துச் செல்லும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒருவர் தான் படித்திருப்பதை அடையாளம் காட்டுவதே அவர் தம் மார்பில் சுமக்கும் இந்த பேனா தான். கிராமப்புறங்களில் படித்த இளைஞர்களை பார்த்துக் கேட்கக்கூடிய முதல் வார்த்தையே "படிச்சப்பய பேனா இல்லாம இருக்கியே பா" என்பது தான்.பல சிறப்புகளைக் கொண்ட இப்பேனா தயாரிப்புக்கு பெயர் பெற்றது தான் விருதுநகர் மாவட்டம்.

 

 

PEN NIPPILE MANUFACTURING EMPLOYEES SUFFER

 

 

குறிப்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரதான தொழிலாக இருந்த 'பேனா நிப்' உற்பத்தி தற்போது படிப்படியாக அழிந்து வருகின்றது. இங்கு 2000- ஆவது ஆண்டுக்கு முன்பு அரை நூற்றாண்டாக இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது. பேனா உற்பத்தி செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல முழுகவனத்துடனும், அதிகப்படியான உழைப்பையும் அளிக்க வேண்டும்.15 -நிலைகளை கடந்து தான் பேனா முழு நிலையையே அடையும். ஒவ்வொரு முல்லையும் தனித்தனியாக உற்பத்தி செய்யவேண்டும். இங்கு 300- க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலையையும், அந்த தொழிலை நம்பி 3000 தொழிலாளர்கள் பணியாற்றினர். இப்படியாக 1000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வந்த இத்தொழிலை தற்போது பால்பேனாக்கள் வந்து முற்றிலும் தாக்கி. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இப்பேனாவை பயன்படுத்தச் செய்தால் இத்தொழில் மேலும் புத்துணர்ச்சி பெரும் என்று பெரும் வருத்தத்துடன் மனம் கலங்குகின்றனர்.

 

 

PEN NIPPILE MANUFACTURING EMPLOYEES SUFFER

 

 

300 க்கும் மேற்பட்ட தொழில்கள் இருந்த இடத்தில் தற்போது 10 -க்கும் குறைவான தொழிற்சாலைகளே உள்ளன. அழிவை நோக்கி சென்ற பல பலமைகள் புத்துயிர் பெற்று வரும் நிலையில் பேனாவும் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்று தொழிலாளர்கள் விரும்புகின்றனர். மிகப் பழமையான நூல் தொல்காப்பியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இந்நூலை வடிவமைக்கப் புலவர்கள் பயன்படுத்தியதும் எழுத்தாணியே. மனித இனம் எழுத்தாணியால் எழுத ஆரம்பித்து.பின்பு மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து இன்று பேனாவால் எழுத ஆரம்பித்துள்ளனர். இது போன்ற பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இப்பேனா இன்று மறுவி பால்பேனாவாக மாறிவிட்டது. கையெழுத்தே அவர் தலையெழுத்தை மாற்றிவிடும் என்பது பழமொழி . சாதிக்க நினைத்த பலர் இப்பேனாவால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளனர்.

 

 

PEN NIPPILE MANUFACTURING EMPLOYEES SUFFER

 

 

ஆனால் இங்கே பேனாவை உற்பத்தி செய்தவர்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கின்றான். பழமையில் இருந்து புதுமைக்கும், புதுமையில் இருந்து பழமைக்கும் மாறுவதே மனிதனின் இயல்பு என்பதைப் போல பேனாக்களின் தேவை வருங்காலங்களில் புத்துணர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் இத்தொழிலை இன்றும் செய்து வருகின்றனர். இதில் பணியாற்றிய அதிகமான தொழிலாளிகள் வருமையின் உசசம் தாங்காமல் இடம்பெயர்ந்து வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  பலர்  அடைந்த சாதனைக்கு பேனாக்கள் ஓர் ஆணிவேராக இருந்தது. ஆனால் இன்று பேனா உற்பத்தி செய்வோர்களுக்கு ஆதரவாக இன்று யாரும் இல்லையே என்று நினைத்து வருந்துகின்றனர் பேனா தொழிலாளர்கள்.

"கத்தியின் முனையை விட, பேனாவின் முனைக்கு பலம் அதிகம்"

 

 


பா.விக்னேஷ் பெருமாள்

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.