Skip to main content

பழனி எம்.எல்.ஏ. இ.பி.செந்தில்குமார் கரோனா தொற்றிலிருந்து குணமடைய திமுக தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
I.P.Senthil Kumar

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். திமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து, இன்று வரை ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்குதல், கையுறை, சானிடைசர் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார். இதுதவிர திமுக நிர்வாகிகள் கிராமம் கிராமமாக சென்று உணவு பொருட்களை வழங்க உத்தரவிட்டார். 

 

dmk

 

 

இதுபோல திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆகஸ்ட் 7ம் தேதி கலைஞரின் நினைவு தினம் அன்று இ.பெ.செந்தில்குமார் ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவமனைக்கும் சென்று நோயாளிகள் மற்றும் செவிலியர்களுக்கு போர்வைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

 

dmk

 

இதுபோல அவரது துணைவியார் மெர்சி செந்தில்குமார் சீலப்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைதொடர்ந்து அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் திமுக தொண்டர்கள் கோவில்களுக்கு சென்று இ.பெ.செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பூரண குணமடைய பல்வேறு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். 

 

பழனியில் இளைஞரணி நிர்வாகிகள் கார்த்திக், அய்யப்பன் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தனர். இதில் பழனி முன்னாள் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாஸ்கரன் தலைமையில் இ.பெ.செந்தில்குமார் பூரண குணமடைய சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 

dmk

 

இதுபோல ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.புதுக்கோட்டை ரமேஷ் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.நாகலட்சுமி மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிவபுரியில் உள்ள ஸ்படிக லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆத்தூர் மற்றும் பழனி சட்டமன்ற தொகுதியில் நூற்றுக்கணக்கான கோவில்களில் திமுகவினர் இ.பெ.செந்தில்குமார் பூரண குணமடைய வழிபாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.