Skip to main content

பச்சையப்பா அறக்கட்டளை முறைகேடுகள் தொடர்பான வழக்கு! -ஆறு மாதங்களுக்குள் அறங்காவலர் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

பச்சையப்பா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ் 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பச்சையப்பா அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அறங்காவலர் குழு தேர்தலுக்கு தடை கோரியும் வழக்கறிஞர் எல்.செங்குட்டுவன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, பச்சையப்பா அறக்கட்டளையை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகியாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.சண்முகத்தை உயர் நீதிமன்றம்
நியமித்தது.

இந்நிலையில், பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் கே.துரைசாமி, என்.ஆர்.சந்திரன், ஏ.எல்.சோமையாஜி, வக்கீல்கள் ஆர்.சி.பால்கனகராஜ், ஜி.மோகனகிருஷ்ணன், வி.ஆர்.கமலநாதன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

 

pachaiyappa Foundation scams - Order to end trustees' election within six months!


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், பச்சையப்பா அறக்கட்டளை மிகவும் பழமையான அறக்கட்டளையாகும். மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது என்பதால் இந்த அறக்கட்டளையின் ஆரம்பகால வரலாறுகளையும் ஆராய்ந்தே தீர்ப்பளித்துள்ளேன். பச்சையப்பா அறக்கட்டளைக்கான நிர்வாகிகள் குழுவுக்கான தேர்தலை தற்போது இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் 6 மாத காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

மாற்றம் செய்யப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் அறக்கட்டளைக்கான உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டும். பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அரங்கம், அம்மா அரங்கம் ஆகியவை குத்தகைகளுக்கு விடப்பட்டுள்ளது. இந்தக் குத்தகை ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. இவற்றை குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனம், 10 நாட்களுக்குள் அந்த அரங்கங்களை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

pachaiyappa Foundation scams - Order to end trustees' election within six months!

 

அறக்கட்டளையில் ஏற்கனவே இருந்த நிர்வாகிகள், அறக்கட்டளையின் விதிகளை மீறி செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது அறக்கட்டளை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள 2 கல்லூரிகளின் விளையாட்டு மைதானங்கள் வாகன நிறுத்தும் இடங்களாக மாற்றப்பட்டிருப்பதை ரத்து செய்து மீண்டும் அந்த இடங்கள் கல்விப்பணிக்காக பயன்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் செயல்படும் வளாகத்துக்குள் இந்த அரங்கங்கள் இருப்பதால் மாணவர்களின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பச்சையப்பா அறக்கட்டளை விழாவைக் கொண்டாட வேண்டும். நிகழ்ச்சி நடந்த ஒரு மாத காலத்துக்குள் ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அறக்கட்டளையின் செயல்பாடு குறித்து ஆண்டுக்கு ஒருமுறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.