Skip to main content

சென்னை வழியாக ஆந்திரா சென்றவருக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

'OmiCron' damage to Andhra Pradesh via Chennai!

 

சென்னை வழியாக ஆந்திரா சென்ற நபருக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

 

கென்யாவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து, பின்னர் திருப்பதிக்குக் காரில் சென்ற 39 வயது பெண்ணுக்கு 'ஒமிக்ரான்' கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் ஆறு பேருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில், அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

 

'ஒமிக்ரான்' கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல்நலன் சீராக இருப்பதாக ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது, ஆந்திராவில் 'ஒமிக்ரான்' கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்