Skip to main content

மூதாட்டிக்கு 3 முறை தடுப்பூசி... ஆட்சியரிடம் முறையிட்ட மகன்! 

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

Grandmother was vaccinated 3 times .. The son who appealed to the collector!

 

தமிழ்நாடு முழுவதும் நேற்று (13.09.2021) சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் பெரிய அளவில் நடைபெற்றது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் நேற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது விட்டலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார், தனது 70 வயது தாயார் கண்ணாம்மாவுடன் முகாமுக்கு வந்தார். அவர், அங்கிருந்த சுகாதாரத்துறை ஊழியர்களிடம், “எனது தாயாருக்கு சொந்த ஊரான விட்டலாபுரத்தில் நடந்த சிறப்பு முகாமில் மூன்றாவது முறையாக கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்படுமா?” என்று விளக்கம் கேட்டுள்ளார். 

 

அப்போது அங்கு கரோனா சிறப்பு முகாமை பார்வையிட வருகை வந்த மாவட்ட ஆட்சியர் மோகனிடம், “ஏற்கனவே என்னுடைய தாயாருக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசியைக் கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஏரி பராமரிப்பு வேலைக்காகச் சென்றபோது சுகாதாரத்துறையினர் போட்டுள்ளனர். நேற்று காலை நான் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது எங்கள் ஊரில் கரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன்பொருட்டு அவர் அருகில் நடைபெற்றுக்கொண்டிருந்த கரோனா முகாமை, பொது மருத்துவ முகாம் என எண்ணி அங்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், அவர் ஏற்கனவே கரோனா தடுப்பூசி எத்தனை முறை போட்டுள்ளார் என்பது குறித்து விசாரிக்காமல் அவருக்கு மூன்றாவது முறையாக கரோனா தடுப்பூசி போட்டு அனுப்பிவிட்டனர். இதுகுறித்து எனக்குத் தகவல் கிடைத்தவுடன் அந்த முகாமுக்குச் சென்று ஊசி போட்ட அவர்களிடம் விவரம் கேட்டபோது, திண்டிவனத்திற்குச் சென்று அங்குள்ள அரசு மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளுமாறு கூறி அனுப்பிவிட்டனர். அதனால் விபரம் கேட்க நான் இங்கே வந்துள்ளேன்” என கூறியுள்ளார். 

 

இதனைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், முகாமில் இருக்கும் மருத்துவ அதிகாரியிடம் சென்று விளக்கம் கேட்குமாறு சிவகுமாரை அனுப்பியுள்ளார். முகாமிலிருந்த மருத்துவ அதிகாரி, சிவகுமாரின் தாயாரை பரிசோதித்து, “உங்கள் தாயாருக்கு தற்போது உடல்நிலை நன்றாக உள்ளது. எனவே, அவரது உடல்நிலையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனடியாக எனக்கு ஃபோன் செய்யுங்கள்” என கூறியுள்ளார். மேலும், சிவகுமாரிடம் தனது மொபைல் எண்ணைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.