Skip to main content

"ஒன்றிணைவோம் வா!" - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கரோனா பாதிப்பை எதிர்கொள்வது குறித்து தமிழகம் முழுவதுமுள்ள திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளிடம் இன்று வீடியோ காண்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். அப்போது, 'ஒன்றிணைவோம் வா' என்கிற புதிய முயற்சியைத் துவக்கியிருக்கிறார். 


 

mks



நிர்வாகிகளிடம் பேசிய அவர், "COVID-19- ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக உதவுவது குறித்து, புதிய முயற்சியைத் துவக்கியிருக்கிறோம். பேரிடர் காலங்களிள் நம் பணி எப்போதும் சிறந்து விழங்கும். அந்த வகையில், தற்போதைய கரோனாவால் உருவாகியிருக்கும் நெருக்கடியான இந்தச் சூழலில் மக்களுக்கு பல்வேறு வகையில் நல உதவிகளைச் செய்து வருகிறீர்கள். தற்போது, புதிய முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள, 'ஒன்றிணைவோம் வா' என்கிற இம்முயற்சியில் ஐந்து தொகுப்புகள் உள்ளன. 
 

'ஸ்டாலினுடன் இணைவோம்',  'பொதுமக்களின் உதவி எண்' , 'நல்லோர் கூடம்', 'ஏழை எளியோருக்கு உணவு', விர்ச்சுவல் வட்டாரக் குழுக்கள் ஆகிய 5 தொகுப்புகள் உள்ளன. இவைகள் மூலம், 2.5 இலட்சம் மக்களிம் குறைகளை நாம் தீர்க்க முடியும். 20 இலட்சம் உணவுப் பொட்டலங்களைக் கட்சி வழங்கும், 10 இலட்சம் குடும்பங்களுக்கு பக்க பலமாயிருந்து நம்பிக்கையூட்டும். அதைவிட அதிகமான தன்னார்வலர்களுக்கு எளிதில் உதவும் முயற்சியை மேற்கொள்ளும். 
 

http://onelink.to/nknapp


யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும், என் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். பசியால் வாடுபவர்களுக்கு, எங்களால் முடிந்தளவு உணவு அளிப்போம். ஒவ்வொரு திமுக உறுப்பினரும், அக்கம் பக்கம் இருக்கும் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில்  உறுதுணையாக இருக்க வேண்டும் " எனக் கலந்துரையாடினார். 
 

மேலும், திமுக  தொண்டர்கள்  முழுவீச்சில் இம்முயற்சியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அடுத்த 2 மாதங்கள், அவர்களுடன் இதில் இணைந்து தானும் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின். 
 

இம்முயற்சியின் தொடக்கமாக, ஸ்டாலினை தொடர்புகொள்ள 90730 90730 என்ற எண்ணையும், ondrinaivomvaa.in என்ற இணையதளத்தயும் அறிமுகப்படுத்தினார். இவைகள் மூலம் வரும் நாட்களில், உதவி தேவைப்படுவோர் எளிதாக உதவிகளை நாடலாம் எனவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.