Skip to main content

தேர்தல் வெற்றியை மிஞ்சிய உதயநிதிக்கான பதவி கொண்டாட்டம்

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 

திமுகவில் உள்ள அணிகளில் இளைஞரணி என்பது மிக முக்கியமானது. தற்போது திமுகவின் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினால் கோபாலபுரம் பகுதி இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டது. பின்னர் அது திமுகவின் அதிகாரபூர்வ அணியாக அங்கீகாரம் பெற்றது. திமுக மாநில இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் நீண்ட ஆண்டுகள் இருந்து வந்தார்.

d

 

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்டாலின், திமுகவின் பொருளாளர் பின்னர் செயல் தலைவரான பின்பு மாநில இளைஞரணி செயலாளர் பதவி முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. 

 

இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், முரசொலி நிர்வாக இயக்குநராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதிஸ்டாலின் களமிறக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார். வெற்றிக்கு அவரின் பிரச்சாரமும் ஒரு பங்கு வகித்தது.

 

இதனால் அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் தரவேண்டுமென அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ, மா.சுப்பிரமணி எம்.எல்.ஏ போன்ற பலரும் ஸ்டாலினுக்கு நெருக்கடி தந்து வந்தனர். உதயநிதியின் தாயும் தனது கணவரும், திமுக தலைவரான ஸ்டாலினிடம் சிபாரிசு செய்ய அதன் அடிப்படையில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஜீலை 4ந்தேதி மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதியை நியமனம் செய்து அறிவித்தார் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன். 

 

d

இந்த அறிவிப்பை பார்த்து, திமுகவை கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்கள் மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த பலர், வாரிசு அரசியல் என சமூக வளைத்தளங்களில் எழுதுகின்றனர். அதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இந்த அறிவிப்பு வந்ததும் மாநிலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுத்து சென்று இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் வைத்து அவருக்கு வாழ்த்து தெரிவிததனர். வாழ்த்து தெரிவிக்க செல்ல முடியாதவர்கள், தாங்கள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

 

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றபோது கூட இப்படியொரு ஆர்ப்பரிப்பை திமுக நிர்வாகிகள் செய்யவில்லை. உதயநிதிக்கு பதவி தந்ததை கொண்டாடுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 
a

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.