Skip to main content

காட்பாடியில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணமான 5வது சிறப்பு ரயில்

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

 

வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்தனர். அதேபோல் புகழ்பெற்ற சி.எம்.சி மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான வெளிமாநில, குறிப்பாக வடகிழக்கு மாநில மக்கள் வந்து தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கரோனா ஊரடங்கு சமயத்தில் இவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். இதனால் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். மத்திய பாஜக அரசு, ரயில் சேவை, விமான சேவையை நிறுத்தியதால் தொழிலாளர்கள், மருத்துவத்துக்காக வந்தவர்களால் சொந்த மாநிலத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.


மறைமுகமாக சரக்கு லாரிகளிலும், நடந்தும் சென்றனர். இதனால் மத்திய பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இருந்தும் அவர்கள் பெரியதாக இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் இருந்து நடந்து சென்ற தொழிலாளர்கள் பலர் இறந்தது நாடு முழுவதும் கொதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பே மத்திய – மாநில அரசுகள் இதில் கவனம் எடுத்து.


தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள், மருத்துவபணிக்காக வந்தவர்கள், மாணவர்கள் போன்றவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க கணக்கு எடுத்தனர். வேலூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து முதல் கட்டமாக 1,132 பேருடன் முதல் ரயில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு கடந்த வாரம் சென்றது. அதன்பின் அடுத்தடுத்து 3 ரயில்கள் பிற மாநிலங்களுக்கு சென்றன.


ஐந்தாவது கட்டமாக மே 12ந் தேதி மேற்குவங்க மாநிலத்திற்கு 2வது சிறப்பு ரயில் புறப்பட்டது. சிறப்பு பேருந்துகள் மூலம் தொழிலாளர்கள், மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர். ஒரு பேருந்துக்கு 25 முதல் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு 50 பேருந்துகள் பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர். பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, இரண்டு வேளைக்கான உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கி சமூக இடைவெளியோடு ரயில் பெட்டிகளில் 1464 பேராக அமர வைக்கப்பட்டனர்.


முற்பகல்  12.00 மணி அளவில் மேற்குவங்க மாநிலம் கரப்பூர் செல்லும் சிறப்பு ரயில் காட்பாடி ரயில்வே ஜங்ஷனிலிருந்து புறப்பட்டது. ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளை ஒழுங்கு படுத்துவதற்காக வருவாய் துறை, காவல்துறை, பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, இரயில்வே துறையினருடன் இணைந்து இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தினரும் பணியாற்றினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

‘16 வருடமாகப் பார்த்து வந்த வேலை நாளையிலிருந்து இல்லை’ - பணியாளர்கள் கவலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Trichy 120 sanitation workers sacked from tomorrow

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றி வரும் 120 தூய்மைப் பணியாளர்கள் நாளையுடன் வேலையை விட்டு நிறுத்தப்பட உள்ளனர். இதற்காகத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பி உள்ளதால் எங்களை வேலையில் இருந்து அகற்றக்கூடாது என வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்காததைக் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். சங்க மாவட்டச் செயலாளர் மாறன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க செயலாளர் சந்துரு, சிஐடியூ நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், ரகுபதி, அன்புசெழியன், வீரமுத்து, கிருஷ்ணமூர்த்தி, முத்து, கணேசன் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.