Skip to main content

விஷம் குடித்த வாலிபரைக் காப்பாற்ற மருத்துவர் இல்லையா..? உறவினர்கள் போராட்டம்! 

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

 Isn't there a doctor to save youth  life ..? Relatives besiege struggle ...!


விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ளது மோட்சக் குளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 26 வயது சுரேஷ். வயிற்று வலி தாங்க முடியாத காரணத்தால், சுரேஷ் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர், மயங்கிக் கிடந்ததைக் கண்டு அவரை மீட்ட அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள சிறுவந்தாடு சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். 

 

அங்கு சிகிச்சை அளிப்பதற்கான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இளைஞரை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லையா என்று அவரின் பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களது உறவினர்கள், மடுகரை சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த வாலிபரை தனியார் வாகனம் மூலம், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

சிறுவந்தாடு சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த, பொது மக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து போலீசார் மீண்டும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

 

இது குறித்து அப்பகுதி வட்டார மருத்துவ அதிகாரிகள் கூறும்போது, வாலிபரை சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது பணியில் இருந்த டாக்டர் அதே பகுதியில் உள்ள பயோமெட்ரிக் அறையில் சென்று பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். இதனால் இளைஞரை, சிகிச்சைக்கு அழைத்துவந்த அவரது உறவினர்கள், டாக்டர் சுகாதார நிலையத்தில் இல்லை என்று கூறுகின்றனர். வாலிபரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அங்கிருந்த டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும், சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் செவிலியர்கள் பணியில் இருந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.