Skip to main content

சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க மாட்டோம்!!! -அமைச்சர் சீனிவாசன்

Published on 26/12/2018 | Edited on 26/12/2018
dindigul seenivasan



வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி கோவிலுக்கு சென்றார்.


வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கோவில் நிர்வாகம் மூலம் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை சிறப்பு தரிசன மூலம் தரிசித்துவிட்டு வந்தார். அப்பொழுது  பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...


அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வருத்தம் தெரிவித்து வந்தால் சேர்த்துக் கொள்வோம் என முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன் அதுபோல் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் வருத்தம் தெரிவித்து விட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் ஆனால் சசிகலாவையும். டிடிவி தினகரனையும் அதிமுகவில்  சேர்க்க மாட்டோம் அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் எல்லாமே ஒத்த கருத்தாக இருக்கிறோம். அதனால் மீண்டும் சசிகலாவும், டிடிவி தினகரனும் தானே முன் வந்து அதிமுகவில் இணைகிறோம் என்றாலும் அவர்களை கட்சியில் சேர்க்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்