Skip to main content

கோதாவில் இறங்கிய பின்னர் பின்வாங்கினால் யாரும் மதிக்கமாட்டார்கள்- ரஜினியை மறைமுகமாக விமர்சித்த கமல்

Published on 17/02/2019 | Edited on 17/02/2019
Kamal who indirectly criticized Rajini!!

 

நாடாளுமன்றத் தேர்தல் அல்லாமல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், கோதாவில் இறங்கிய பின்பு பின்வாங்கினால் மற்றவர்கள் யாரும் மதிக்க மாட்டார்கள் என பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

 

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி   தலைவர் கமல்ஹாசன் பேசுகையில்,  மீசையை முறுக்கிவிட்டு கோதாவில் இறங்கிய பின்னர் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினால் யாரும் மதிக்க மாட்டார்கள் என கூறினார்.மேலும்  இலை போட்டு சாப்பிட தயாரான பின்னர் சாப்பிடவில்லை என்று கூறினால் எதற்காக வந்தீர்கள் என்று கேட்பார்களே என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்