Skip to main content

காரமடை விவசாயிகள் எதிர்ப்பு; கால் கடுக்க நிற்கும் மக்னா

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Karamadai Farmers struggle... Magna is standing on

 

தமிழக வனத்துறையினரால் கோவையில் பிடிபட்ட மக்னா யானை காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் விடுவதற்கு காரமடை பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

கோவையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிடிக்கப்பட்ட மக்னா யானையை காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக பிடிபட்ட மக்னா யானையை லாரி மூலம் காரமடை வெள்ளியங்காடு சாலைக்கு கொண்டு வந்தனர். இதனையறிந்த வெள்ளியங்காடு ஊர் மக்கள் மற்றும் அந்த பகுதி விவசாயிகள் யானையை கொண்டு வந்த தமிழ்நாடு வனத்துறை லாரியை முற்றுகையிட்டு நிறுத்தி யானையை திரும்பிக் கொண்டு செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இங்கே மக்னாவை விட்டால் மீண்டும் ஊருக்குள் வந்து மக்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும். விளைநிலங்களை வீணடிக்கும் என விடிய விடிய போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மக்களுடன் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் யானை மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை மரக்கிடங்கில் லாரியுடன் மக்னா யானை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை உயர் அதிகாரிகள் எந்த வனப்பகுதியில் விடுவது என முடிவெடுக்காததால் கால் கடுக்க லாரியில் நிற்கிறது மக்னா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.