Skip to main content

“படிக்க கஷ்டமா இருக்கு...அதனாலதான் இந்த முடிவு” - கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

"It is difficult to read; That's why this decision" after writing the letter, the student

 

“என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு படிக்க கஷ்டமா இருக்கு. அதனாலதான் நான் இந்த முடிவெடுத்தேன். என்ன மன்னிச்சிருங்க” என எழுதி வைத்துவிட்டு விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஜக்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகள் செல்வராணி. இவர் திருச்செந்தூர் அருகே உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் செல்வராணி அறையிலிருந்த மற்றொரு மாணவி அவரது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். 

 

கல்லூரி விடுதியில் தங்கி இருந்த அவர் இன்று காலை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்செந்தூர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராணி தங்கியிருந்த அறையை சோதனை செய்த காவல்துறையினர் காகிதம் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். அதில் “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்குப் படிக்க கஷ்டமா இருக்கு. அதனாலதான் நான் இந்த முடிவெடுத்தேன். என்ன மன்னிச்சிருங்க” என எழுதப்பட்டிருந்தது.

 

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்செந்தூரில் கொட்டித்தீர்த்த மழை

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
 Heavy rain in Tiruchendur

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கன மழைப்பொழிவை ஏற்படுத்திய வளிமண்டல சுழற்சி தற்பொழுது விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி காயல்பட்டினத்தில் 21 சென்டிமீட்டர் மழை இன்று பதிவாகியுள்ளது. நேற்று 95 சென்டி மீட்டர் மழை காயல்பட்டினத்தில் பதிவாகிய நிலையில் இன்று 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 23.1 சென்டி மீட்டர் மழையும், குலசேகரப்பட்டினம் 18.4 சென்டி மீட்டர், ஸ்ரீவைகுண்டம் 17.4 சென்டி மீட்டர், சாத்தான்குளம் 15.6  சென்டி மீட்டர் தூத்துக்குடி 13.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Next Story

தொடர் கனமழை; 1000க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் அவதி

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Continuous heavy rain; More than 1000 train passengers suffered

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நேற்று சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அதே சமயம் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், தண்டவாளம் சேதம் காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ரயிலில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரயில்வே தரப்பில் இருந்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.