Skip to main content

மழையால் சுவர் இடிந்து விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
incident in thirupathur

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புருஷோத்தம குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி அய்யம்மாள், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருடைய மகன் ராகுல்காந்தி அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

மண்ணால் கட்டப்பட்ட கூரை வீடு இவர்களுடையது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு தொகுப்பு வீடு கேட்டு மனு தந்துள்ளனர். சமீபமாக தினமும் மாலை வேளையில் மழை வருகிறது. இதனால் ஒழுகும் நிலையில் உள்ள அந்த வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.

 

இந்தநிலையில் மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து ஜூலை 8 ந்தேதி இரவு அய்யம்மாள் இறந்துள்ளார். அவரது உடல் மண்ணுக்குள் புதைந்துள்ளது. ஜூன் 9 ந்தேதி காலை உடலை தோண்டி எடுத்துள்ளனர்.

 

incident in thirupathur

 

 

இவர்களுக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்ட, ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக ஏற்பாடுகள் செய்து தருவதாகக்கூறி அவர்களிடம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை வாங்கிக்கொண்டு, வீடு கட்டி முடிக்கப்பட்டது என ஏமாற்றி 1,70,000 ரூபாய், அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வர அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

 

முறையாக வீடு கட்டி தந்திருந்தால் இந்த பெண்மணி இறந்திருக்கமாட்டார். அதிகாரிகளின் கொள்ளையால் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலியாகியுள்ளார் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி, சடலத்தை எடுக்க விடாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றபின்பே மக்கள் சமாதானம் அடைந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.