Skip to main content

மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி, தமிழக - கர்நாடகா எல்லையில உள்ளதால் யானைகள் அதிகளவில் உள்ளன.

யானைகள் தண்ணீர், உணவு தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களில் உள்ள பயிர்களை நாசப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வந்தனர்.

 

incident in salem...


யானைகள் விவசாய பயிர்களை நாசப்படுத்துவதை தடுக்க, விளை நிலங்களைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்தும், அகழிகள் வெட்டியும் விவசாயிகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை (டிச. 14) காலை பெரிய தந்தான் வனப்பகுதியில் தண்டாகேட் அருகில் உள்ள கிமியான் காட்டுவலவு பகுதியில் தங்கவேல் என்பவருடைய தோட்டத்தில் பெரிய தந்தத்துடன் கூடிய யானை ஒன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். மேட்டூர் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த யானைக்கு 40 வயது இருக்கும் என வனத்துறையினர் கூறுகின்றனர். அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்