Skip to main content

செம்மரம் வெட்டச் சென்று தப்பிய 7 பேர்! - தேடும் ஆந்திர போலீஸ்!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

 Andhra Pradesh police search for 7 people who escaped after cutting a sheep!

 

தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டச் செல்பவர்கள் அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு செம்மரம் வெட்டச்சென்ற தமிழக கூலித் தொழிலாளர்களைப் பிடித்துச் சுட்டுக்கொன்றதால், அதன்பின் அங்கு செல்வது குறைந்தது. இருந்தும் ஆந்திர செம்மர மாஃபியாக்கள், அதிக கூலி ஆசைகாட்டி அழைத்துச் செல்வது வாடிக்கையாகவே உள்ளது.

 

இந்நிலையில், இன்று (டிசம்பர் 18-ஆம் தேதி) ஆந்திர மாநிலம் புத்தூர் சோதனைச் சாவடியில், ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். லாரியில் தார்ப்பாய்களுக்குக் கீழே, 30-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இருந்துள்ளனர். அவர்களை மடக்கி போலீஸார் விசாரிக்கும்போது, 7 பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மீதியிருந்த 25 பேரை பிடித்து விசாரித்தபோது, செம்மரம் வெட்ட அழைத்துச் செல்வது தெரிந்தது. 25 பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர் போலீசார்.  

 

தப்பி ஓடிய 7 பேரை தேடத் துவங்கியுள்ள போலீசார், அதேநேரத்தில் இவர்களை அழைத்து வந்தது யார்? ஆந்திராவில் அவர்களின் தொடர்பாளர் யார்? தமிழகத்தில் இருந்து அனுப்பிவைத்தது யார்? என்பனவற்றை விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செம்மரக் கடத்தலை தடுத்த காவலருக்கு நேர்ந்த சோகம்; கடத்தல்காரர்கள் வெறிச்செயல்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
incident for redwood issue in andhra police ivloved 

ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள அண்ணமய மாவட்டம் கே.வி. பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட குன்றோவாரி பள்ளி சந்திப்பு அருகே செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவலர்கள் வழக்கம் போல் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 5 பேர் கொண்ட செம்மரக்கடத்தல் கும்பல் ஒன்று கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரில் வேகமாக வந்துள்ளனர்.

இந்த காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவலர் பி. கணேஷ் (வயது 30) என்பவர் மீது மோதிவிட்டு வேகமாக தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் காவலர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த 3 கடத்தல்காரர்கள் தப்பி ஓடிய நிலையில் இருவரை பிடித்த போலீசார் அவர்களிடம் திவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காரில் இருந்த 7 செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தப்பிச் சென்ற 3 கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செம்மரக்கடத்தலை தடுப்பதற்காக சென்ற போலீசார் மீது கார் ஏற்றிய சம்பவத்தில் போலீசார் பலியாகியுள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; கேபிள் ஆபரேட்டருக்கு போலீஸ் வலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
The old woman who was alone at home was brutalized; Police net for cable operator

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை துண்டால் நெரித்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கேபிள் ஆபரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கௌரவ பள்ளம் பூங்கா அருகே வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி. இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டர் கோவிந்த் நல்ல முறையில் பழகி வந்துள்ளார். வீட்டில் மூதாட்டி லட்சுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த கோவிந்த் அடிக்கடி வீட்டுக்கு வந்து உதவிகளை செய்வது போல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வீட்டுக்கு வந்த கேபிள் ஆபரேட்டர் கோவிந்த், சோபாவில் மூதாட்டி அமர்ந்திருந்தபோது பின்புறமாகச் சென்று கையில் இருந்த துண்டால் கழுத்தை நெருக்கியுள்ளார். மூதாட்டி கத்திக் கூச்சலிட முயன்றும் விடாமல் நெருக்கமாகக் கழுத்தை நெருக்கியுள்ளார். இதில் மூதாட்டி மயக்கம் அடைந்தார். ஆனால் மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்த கோவிந்த், அவரிடம் இருந்த பத்து சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்த மூதாட்டி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கேபிள் ஆபரேட்டர் மூதாட்டியின் கழுத்தை நெரிக்கும் அந்த பரபரப்பு காட்சிகள் இடம் பெற்ற நிலையில், அதை ஆதாரமாக வைத்து கேபிள் ஆபரேட்டர் கோவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.