Skip to main content

முன்னாள் திமுக பெண் மேயர் படுகொலை... பதற்றத்தில் நெல்லை (படங்கள்)

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே பட்டப்பகலில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர், அவரது கணவர், வீட்டு பணி பெண் ஆகிய 3 பேரை மா்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிடடனர். நகைக்காக கொலை நடந்ததா, அல்லது சொத்து தகராறில் கொலை நடந்ததாக என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது கணவர் முருகன்சங்கரனுடன் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தார். முருகன்சங்கரன் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் பிரியா என்ற மகள் திருச்சியில் குடும்பத்துடன் உள்ளார், அடுத்த மகள் கார்த்திகா பொற்றோர்களின் வீட்டின் அருகிலேயே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவா் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் இன்று பிற்பகலில் உமாகேஸ்வரி, அவரது கணவர் முருகன்சங்கரன் மற்றும் வீட்டு பணி பெண் மாரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூன்று பேரையும் கத்தியால் குத்தி விட்டு உமாமகேஸ்வரி தப்பியோடிவிட்டனர். மூன்று பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

அக்கம் பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லாததால் கொலை நடந்த தகவல் பல மணி நேரம் வெளியில் தெரியவில்லை. மாலையில் அவர்களது மகள் கார்த்திகாக கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது கொலை சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்ததும் மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் அா்ஜுன்சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். மேலும் மூன்று பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கொலை சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரது வீட்டு முன்பு தி.மு.க.வினர், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

 


கொலை சம்பவம் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதற்கட்ட விசாரணையில் கொலையான உமாமகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த செயின், கையில் அணிந்திருந்த வளையல்கள் காணாமல் போய் உள்ளது எனவே ஆதாயத்திற்காக நடந்த கொலையாக இருக்காலம் என சந்தேகிக்கிறோம். கொலையாளிகளை பிடிப்பதற்கு காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடிஅருணா அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இரங்களைத் தெரிவித்த அவர் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி  கழகத்திற்கு பேரிழப்பு என்று கூறினார். கொலைச்சம்பவம் குறித்து   மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக கொலை நடந்ததா அல்லது சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான உமாமகேஸ்வரி நெல்லை மாநகரத்தின் முதல் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.