Skip to main content

மக்கள் நீதி மய்ய நிர்வாகி வீட்டில் கைவரிசை.... போலீசார் வலை!

Published on 12/12/2021 | Edited on 12/12/2021

 

Incident in MKN administrator home

 

திருவண்ணாமலை நகரம் போளூர் சாலையில் உள்ள துரைராஜ் நகரில் வசிப்பவர் கலாவதி. இவரது கணவர் கோவிந்தராஜ். கலாவதி திருவண்ணாமலை ஒன்றிய செயலாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போளூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

 

Incident in MKN administrator home

 

கடந்த வியாழக்கிழமை போந்தை கிராமத்திலுள்ள விவசாய நிலத்தைப் பார்க்க கலாவதி குடும்பத்தோடு சென்று உள்ளார். டிசம்பர் 11ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த இருபத்தி எட்டு சவரன் நகைகளைக் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டு உரிமையாளர் கலைச்செல்வி, கணவர் பெயர் சுப்பிரமணி. அவர்கள் குடும்பத்தோடு சென்னை சென்று உள்ளார்கள். அவர்கள் வீட்டில் 2000 ரூபாய் பணமும் ஒரு சவரன் தங்க நகரையும் திருடு போய் இருக்கிறது.

 

Incident in MKN administrator home

 

இரு குடும்பத்தாரும் டிசம்பர் 12ஆம் தேதி ஊருக்குத் திரும்பி வந்துள்ளார்கள். கதவு உடைக்கப்பட்டு பொருள் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து இரு குடும்பத்தாரும் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடங்களுக்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். இரு குடும்பத்தாரும் தந்த புகார்களை வாங்கி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஒரே தெருவில் அடுத்தடுத்து திருடர்கள் வந்து கைவரிசை காட்டியிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.