Skip to main content

ஊராட்சி மன்றத் தலைவரின் முறைகேடுகளைக் கண்டித்து வார்டு உறுப்பினர்கள் கண்ணை கட்டி போராட்டம்

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

Ward members closed their eyes and against the irregularities of the Panchayat Council Chairman!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் அய்யங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர்ராஜின் முறைகேடுகளைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது குறைகூறியும் அய்யன்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் முன்பு கண்ணைக் கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

 

ஆத்தூர் ஒன்றியம், அய்யங்கோட்டை ஊராட்சியில் 9 வார்டுகளும், அய்யங்கோட்டை, அ.புதூர், சொர்ணாபுரம் காலனி ஆகிய மூன்று கிராமங்களும் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவராக ஆர்.சுந்தர்ராஜ் என்பவரும், துணைத்தலைவராக வசந்தமயிலும் பதவியில் உள்ளனர். வார்டு உறுப்பினர்களாக பி.செல்வமகாமுனி, ஆர்.சரண்யா, ஆர்.இளங்கோவன், எஸ்.சத்யா, சி.முனிராஜா, சுகந்தி, பரந்தாமன், ஆர்.நாகஜோதி ஆகியோர் உள்ளனர். இவர்களில் 8 பேர் ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர்ராஜின் முறைகேடுகளைக் கண்டித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மாதம் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதன்பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

 

வெள்ளிக்கிழமை அன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த அய்யன்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் இளங்கோவன், சரண்யா, நாகஜோதி, செல்வமகாமுனி, பரந்தாமன், முனிராஜா ஆகியோர் கண்ணில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயிலில் தரையில் அமர்ந்து கொண்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர்ராஜிக்கு எதிராக கோஷமிட்டதோடு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெங்கராஜன் ஊராட்சி மன்றத் தலைவரின் ஊழலுக்கு துணை போவதாகக் குற்றம் சாட்டினார்கள்.

 

இதுகுறித்து வார்டு உறுப்பினர் சரண்யா கூறுகையில், “ஊராட்சி மன்றத் தலைவர் வார்டு உறுப்பினர்களை மதிப்பதே கிடையாது. மூன்று வருடங்களாக வரவு செலவு நோட்டுக்களை வார்டு உறுப்பினர்களுக்கு காண்பிப்பது இல்லை. கூட்டம் நடத்தாமலேயே கூட்டம் நடத்தியதாகக் கணக்கு காண்பித்து விடுகிறார்கள். ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவரே காண்ட்ராக்ட் வேலை எடுத்துச் செய்கிறார். அவரது முறைகேடுகள் குறித்து கேட்டால் ‘நான் சும்மாவா செய்கிறேன். ஊராட்சி உதவி இயக்குநருக்கு 3 சதவிகிதம், திட்ட அலுவலருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தான் காண்ட்ராக்ட் வேலைகளைப் பெற்றுச் செய்கிறேன். நீங்கள் எங்கு போய் புகார் செய்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்’ என்று கூறுகிறார்” என்றார்.

 

Ward members closed their eyes and against the irregularities of the Panchayat Council Chairman!

 

அய்யன்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரிந்தவுடன் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெங்கராஜன் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் அறையில் அய்யன்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை செய்தார். சுமார் ஒருமணி நேரம் அறைக்கதவை அடைத்துக் கொண்டு விசாரணை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இதுகுறித்து அய்யன்கோட்டையைச் சேர்ந்த ஊராட்சி உறுப்பினர்கள் கூறுகையில், “இப்போது வந்து ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெங்கராஜன் விசாரணை செய்கிறார். ஊராட்சி மன்றத் தலைவர் மீது பலமுறை புகார் செய்தும் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் எங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் உதவி இயக்குநருக்கு கமிசன் அதிகமாக கொடுப்பதால் நாங்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை” என்றனர். ஒன்றிய அலுவலக நுழைவுவாயிலில் அய்யன்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியது செம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.