Skip to main content

15 வயது சிறுமியை  கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோவில் கைது!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
incident in cuddalore

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.  

 

அந்த சிறுமி  அரசூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதற்காக பண்ருட்டி பேருந்து நிலையம் செல்லும்போது அங்குள்ள பழக்கடையில் வேலை செய்யும் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த  இருந்து தட்சினாமூர்த்தி (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். காதலிக்கும் போது அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டனர். அதன்படி சம்பவத்தன்று  தனது வீட்டுக்கு வருமாறு சிறுமியை தட்சிணாமூர்த்தியை அழைத்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல்  பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதையடுத்து அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது சிறுமி திருமண ஆசை காட்டி தன்னை தட்சிணாமூர்த்தி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.  அதனால் கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அந்த சிறுமியை அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி  நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

சிறுமிக்கு 14 வயது தான் என  தெரிந்து கொண்டு, அவர்கள் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் வனஜா  மற்றும் போலீசார் தட்சினாமூர்த்தியை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.