Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; கணவனை சரமாரியாக வெட்டிய மனைவி! 

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Husband in critical stage police arrested his wife and her boy friend

 

தர்மபுரி அருகே, ரகசிய காதலனுடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததை பார்த்துவிட்ட கணவனை கொடுவாளால் சரமாரியாக வெட்டிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி (50) கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி காவியா (45 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வசிக்கிறார். மற்றொரு மகள் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், உள்ளூரைச் சேர்ந்த ராமன் (26) என்பவருக்கும் காவியாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்த ராஜாமணி, மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பலமுறை கணவர் எச்சரித்த பிறகும் கூட காவியாவோ, ராமனுடனான உறவைத் தொடர்ந்து வந்துள்ளார். இப்படியான நிலையில், மார்ச் 27ம் தேதி இரவு ராஜாமணி, காவியா, மகள் ஆகியோர் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

இந்நிலையில் திடீரென்று யாரோ சிலர் முணுமுணுக்கும் சத்தம் கேட்டு, ராஜாமணி எழுந்து பார்த்தபோது அந்த இரவு நேரத்தில் ராமனும், காவியாவும் வீட்டின் ஒரு பகுதியில் தனிமையில் நெருக்கமாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். கணவர் பார்த்துவிட்டதை அறிந்த காவியா, இனி விபரீதமாக ஏதாவது நடக்கும்  என்பதை உணர்ந்து வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து கணவன் என்றும் பாராமல் தலை, கை, கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ராஜாமணி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்தார். இதைப் பார்த்த ராமன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடிவிட்டார். இதையடுத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கணவனை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப் பக்கமாக பூட்டிய காவியா, கொடுவாளை வீட்டு வாசலில் வைத்துவிட்டு தொப்பூர் காவல்நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.

 

இதற்கிடையே, ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக் கொண்டிருந்த  ராஜாமணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை விசாரணையில், திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை வெட்டியதாக காவியா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இந்த சம்பவத்திற்கு தனது ரகசிய காதலனும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து காவியா மற்றும் அவருடைய ரகசிய காதலன் ராமன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், காவியாவை சேலம் பெண்கள் கிளைச் சிறையிலும் ராமனை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர். இந்த சம்பவம் நல்லம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.