Skip to main content

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

heavy rains tamilnadu schools and colleges holidays

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் இன்று (26/11/2021) விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

 

அதன்படி, சென்னை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26/11/2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (26/11/2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்