Skip to main content

கானா பாடகி இசைவாணி காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Ghana singer makes sensational complaint to police commissioner

 

கானா பாடகியான இசைவாணி தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் என்ற ஷோவில் கலந்துகொண்டு பிரபலமானவர். திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'மார்கழியில் மக்கள் இசை' நிகழ்ச்சியிலும் கானா பாடல்களை பாடியுள்ளார். இன்று இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.  2019 ஆம் ஆண்டு சதீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட இசைவாணி கருத்துவேறுபாடு காரணமாக சட்டபடி விவாகரத்து பெற்றார். இந்நிலையில் முன்னாள் கணவன் மீது புகார் கொடுத்துள்ளார்.

 

அதில்,'முன்னாள் கணவர் சதீஷ் தன் பெயரை சொல்லி ஆர்கெஸ்டரா நடத்துகிறார். தன்னை அவரது மனைவி என்று சமூக வலைத்தளங்களில் கூறிக்கொண்டு திருமணமானபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை பயன்படுத்தி என் பெயரை சொல்லி மோசடியில் ஈடுபடுகிறார்.  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் என்னை பாட வைப்பதாக பணம் பெற்று ஏமாற்றுகிறார். இதனால் அவரிடம் பணம் கொடுத்தவர்கள் தன்னிடம் வந்து கேட்கும்போதுதான் இதுபோன்ற மோசடி எல்லாம் தெரிய வருகிறது. இதுதொடர்பாக கேட்டால் ஆசிட் வீசி விடுவதாக கொலைமிரட்டல் விடுகிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.