Skip to main content

கஞ்சா பொட்டலம் விற்கும் நிலைக்கு சிறுவர்களைத் தள்ளிய கஞ்சா பழக்கம்-இருவர் மீது வழக்கு!

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

 Ganja habit that forced children to sell ganja packets - case against two in Sivakasi police station!

 

போதைப் பொருளான கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது தமிழ்நாடு காவல்துறை. ஆனாலும், தவறான வழியில் பணம் சம்பாதிப்பதையே  குறிக்கோளாகக் கொண்டு கஞ்சாவைப் புழக்கத்தில்விடும் பேர்வழிகள், இளைய சமுதாயத்தை கஞ்சா போதைக்கு அடிமையாக்குவதில் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்.

 

சிவகாசியைச் சேர்ந்த சங்கிலியின் மகன் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) ஸ்ரீவில்லிபுத்தூர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12ஆம் படித்து முடித்திருக்கிறான். கடந்த 10-ஆம் தேதி இரவு முழுவதும் அவன் வீட்டுக்கு வரவில்லை. 11ஆம் தேதி காலை ஒரு மாதிரியான நிலையில் அவன் வீட்டுக்கு வந்தபோது,   “ராத்திரி முழுக்க எங்கே போயிருந்த?” என்று விசாரித்த சங்கிலி, மகனுடைய பேன்ட் பாக்கெட்டை சோதனை செய்த்தபோது , சின்னதாக ஒரு கஞ்சா பொட்டலம் இருந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவன் “நண்பர்கள் ராஜரத்தினம், ராஜபாண்டியோடு நானும் சேர்ந்து சிவகாசி நாரணாபுரம் ரோடு போஸ் காலனி, முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த கார்த்தீஸ்வரனிடமும் மதனிடமும் அடிக்கடி கஞ்சா வாங்கி புகைப்போம். அந்தப் பழக்கத்தில் கஞ்சா வாங்கி விற்று ராஜபாண்டி மூலம் அவர்களுக்கு பணம் கொடுப்போம். இந்த வேலையைச் செய்ததற்கு எனக்கு பணமும் கொஞ்சம் கஞ்சாவும் கொடுத்தார்கள். அந்த கஞ்சாவை குடித்துவிட்டு, ராத்திரி முழுவதும் சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் பக்கம் இருந்தேன்.” என்று தந்தை சங்கிலியிடம் நடந்ததைச் சொல்லியிருக்கிறான்.

 

மறுநாள் 12 ஆம் தேதியும் இரவு வீட்டுக்கு வராமல் அதிகாலை 3 மணிக்கு அதே நிலையில் மகன் வர, சங்கிலி சோதனை செய்தபொழுது 15 சின்ன கஞ்சா பொட்டலங்கள் இருந்திருக்கின்றன.  அதன்பிறகு 13-ஆம் தேதி சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் சங்கிலி புகார் கொடுத்திருக்கிறார். சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட பிரிவு மற்றும்  போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டப் பிரிவுகளின் கீழ் மதன் மற்றும் கார்த்தீஸ்வரன் மீது வழக்கு பதிவாகியுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.