Skip to main content

நாகை மாவட்டத்தை புறட்டிப்போட்ட கஜா புயல்!! (படங்கள்)

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

 

வங்கக் கடலில் ஒருவாரமாக மிரட்டிக் கொண்டிருந்த கஜா புயல் பல்வேறு பில்டப்களோடு வேதாரண்யம் கடற்பகுதியில் கரையை கடந்துள்ளது.  

 

 நாகை, தஞ்சை, திருவாரூர்  உள்ளிட்ட மாவட்டங்களில்  நேற்று மாலைவரை வறண்டு காணப்பட்ட மேகம் திடீரென சூழ்ந்து  மழை பெய்ய தொடங்கியது. இரவு பத்துமணிக்கு மேல் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்துக்கொண்டே இருந்தது. 

 

காற்றும் விட்டு விட்டு வீசத்துவங்கியது. மின்சாரங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டன, கடைகளை வர்த்தகர்களே முன்வந்து 9 மணிக்கு மேல் பூட்டிவிட்டனர். பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. டெல்டா மாவட்டங்களே ஊரடங்கு உத்தரவிட்டது போல காட்சியளித்தது. மழையின் வேகம் அதிகரித்து வீதிகளில் பெருக்கெடுத்தது. 11 மணிக்கு மேல் காற்றின் வேகம் அதிகரித்தது.

 

இரவு 12 மணிக்கு  மேல் அதிக  காற்று வீசி பீதியில் ஆழ்த்தியது பிறகு அதிகாலை 2.30 மணியளவில் புயல் கரையை கடந்தது. அப்போது 120 கி.மீ வேகத்தில் பலத்தகாற்று வீசியது. காற்றின் வேகத்தால் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீதிகளிலும்,  வீட்டின் மீீதும், மின்கம்பங்கள் மீதும் விழுந்தது.

 

ஆனாலும் விடிந்து 8 மணிக்கு புயல் காற்றின் வேகம் குறையாமல் காணப்பட்டது. பேரிடர் மீட்பு பணியினர் பாதிப்புகளுக்கு உள்ளான இடங்களுக்கு விரைந்து சென்று சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்திவருகின்றனர். அவர்களோடு சமுக ஆர்வளர்களும், பொதுமக்களும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதலுடன் கூடிய உதவிகளை செய்து வருகிறனர்.  அவரோடு அவரது கட்சியினரும் வேதாரண்யம் பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

புயல் குறித்து வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரிடம் பேசினோம், " ஐந்து நாட்களுக்கு மேலாக எங்களை பீதியாக்கிக்கொண்டிருத கஜாபுயல் ஒருவழியாக பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டே கரையை கடந்து இருக்கிறது. குடிசைகள் முழுவதும் காற்றில் சூறையாடப்பட்டுவிட்டன.  மரங்கள் முழுவதும் முறிந்துவிட்டது.  இதை அப்புறப்படுத்துவதற்கே  இரண்டு மூன்று நாட்கள் பிடிக்கும். மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுவிட்டது.  ஏற்கனவே விவசாயம் பாழ்பட்டு போய்கிடக்கிறது. இன்னும் நாங்கள் படகுகளை பார்கவில்லை, எத்தனை படகுகள் புயலால் சேதமாகியிருக்கிறது என்பது தெரியல, வருஷா வருஷம் மழையும் வருது புயல் அடிக்கிறது, எங்க வாழ்க்கையில பஞ்சமும் வந்துக்கிட்டுதான் இருக்கு." என்றார் கலங்கிய குரலுடன்.

 

இப்படி கஜா புயல் ஒரு நாகை மாவட்டத்தை  புரட்டிப் போட்டு விட்டது என்றே கூறவேண்டும்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.