Skip to main content

மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

Father arrested for misbehaving with daughters

 

சேலம் அருகே, பெற்ற மகள்கள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.   

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வசிப்பவர் கோவிந்தன். இவருடைய மகன் கண்ணன் (40) கட்டடத் தொழிலாளி. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 மற்றும் 4 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகளும் 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சுகன்யாவுக்கு, சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்த சுகன்யா, தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அந்த வாலிபருடன் ஒன்றாக வாழத் தொடங்கினார்.

 

கடந்த 20 நாள்களுக்கு முன்பு, அம்மாபேட்டையில் உள்ள சுகன்யாவின் வீட்டுக்குச் சென்ற கண்ணன், அங்கிருந்த தனது மூன்று குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், கடந்த 5 நாள்களுக்கு முன்பு மகனை மட்டும் சுகன்யாவிடம் விட்டுவிட்டு, மகள்கள் இருவரையும் தன்னுடனேயே வைத்துக் கொண்டார். இந்நிலையில், மார்ச் 28 ஆம் தேதி 9 வயதான மூத்த மகள் அழுதுகொண்டே பக்கத்தில் வசிக்கும் பெரியம்மா நல்லம்மாளின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். சிறுமியிடம் நல்லம்மாள் விசாரித்தபோது, அப்பா கண்ணன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறாள். தன் தங்கையிடமும் அதேபோல் தவறாக நடந்து கொண்டதாகவும் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நல்லம்மாள், இதுகுறித்து காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

 

காவல் ஆய்வாளர் தனலட்சுமி, கண்ணனை அழைத்து விசாரித்தார். சிறுமிகளிடமும் விசாரணை நடந்தது. இதில், பெற்ற மகள்கள் என்றும் பாராமல் அவர்களிடம் மாறி மாறி பாலியல் பலாத்காரத்தில் கண்ணன் ஈடுபட்டது தெரிய வந்தது. போதிய உணவு கொடுக்காமல் பெண் குழந்தைகளை பட்டினி போட்டு சித்திரவதை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டு, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பெற்ற மகள்களை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.