Skip to main content

சுடுகாட்டை தக்க வைக்க போராட்டம்...!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

erode public on collector office issue

 

 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள  வெள்ளாளபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் உள்ளே செல்ல அனுமதி இல்லை. முக்கியமானவர்கள் மட்டும் செல்லுங்கள் என்று கூறினர். 

 

இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்குமிடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து அந்த கிராம மக்கள் திடீர் என ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது, "எங்கள் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டை தான்  நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம். சுடுகாடு 1.33 ஏக்கர் நிலம் உடையது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் அந்த சுடுகாட்டின் 75 சென்ட் அளவு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். 

 

அந்த இடத்தில் அவர் விவசாயம் செய்து வருகிறார். இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலர்களுக்கு நாங்கள் புகார் செய்தோம். அதன்பேரில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து நிலத்தை அளந்து சென்றனர். இந்த நிலையில் சென்ற மாதம் 30ஆம் தேதி எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய மயானத்திற்கு சென்று பார்த்தபோது அதே நபர் மயானத்தை மீண்டும் ஆக்கிரமித்து இருந்தார். 

 

இதைக் கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அடுத்த நாள் நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் நம்பியூர் இன்ஸ்பெக்டர் உட்பட அரசு அலுவலர்கள், ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்த கம்பி வேலியை அகற்றி இறந்த நபரை புதைக்க உதவி செய்தனர். இதற்கிடையே பதினாறாம் நாள் சடங்கு செய்வதற்காக நாங்கள் மயானத்தை சென்று பார்த்தபோது இறந்த நபர் புதைத்த இடத்தில் அந்த ஆக்கிரமிப்பாளர் ஜேசிபி எந்திரம் மூலம் குழிதோண்டி உடலை அப்புறப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார். 

 

இதுகுறித்து நம்பியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. எனவே நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மயானத்தை எங்களிடம் மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும். மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.