Skip to main content

உழைப்பாளிகள் முதல் சூதாடிகள் வரை..! தற்கொலைகள் அதிகமான நமது நாடு..!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

eeee

 

கரோனா காலம் என்பது அன்றாடம் உழைத்து, அதில் வரும் வருமானத்தை வைத்து சமைத்து உண்டு வாழும் ஏழைகள் முதல் நவீன சூதாட்டமான ஆன்லைன் வர்த்த தொழில் புரிவோர் வரை எல்லோரையும் விட்டு வைக்காமல் தனது கொடுங்கரத்தால் பொருளாதார நஷ்டம், பின்னடைவை ஏற்படுத்தி அவர்களது வாழ்வை சூறையாடி வருகிறது.

 

ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்தவர் 40 வயதான நரசிம்மன், இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. நரசிம்மன் நடத்தி வந்த தொழில், ஆன்லைன் வர்த்தகம். ஈரோடு சம்பத் நகரில் சேர்கான் என்ற ஆன்லைன் வர்த்தக ட்ரேடிங் அலுவலகத்தை நீண்ட நாட்களாக நடத்தி வந்தார். 

 

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் அமல்படுத்திய ஊரடங்கால் இவரது தொழிலும் சிதைந்தது. சென்ற சில மாதங்களாக நரசிம்மனுக்கு பல லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து மனவேதனையுடன் காணப்பட்ட நரசிம்மன், தொழில் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால், தனக்கு ஏற்பட்ட பல லட்ச ரூபாய் கடனையும் அடைக்க முடியாது இருந்துள்ளார். வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்து நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

 

இதைப்பார்த்து பயந்து துடித்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நரசிம்மனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு நரசிம்மன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது சம்பந்தமாக ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Ad

 

எல்லா தொழிலும் சிதைவு ஏற்பட்டு இறுதி சுவாசத்தை நிறுத்தி வருகிறது. இந்த 2020-இல் உழைப்பாளி முதல் சூதாடி வரை தற்கொலைகள் சராசரி இரண்டு மடங்கு கூடியுள்ளது. இந்த நிலையிலும் ஆட்சியாளர்கள் எதற்கும் அசராமல் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவோம் என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.