Skip to main content

நாட்டை ஆளும் தகுதி மோடிக்கு மட்டுமே- இபிஎஸ் பேச்சு

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

eps speech

 

காஞ்சிபுரம் கேளம்பாக்கத்தில் நடந்துவரும் அதிமுக பாஜக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

 

இந்தியா நாட்டை ஆளும் தகுதி பிரதமர் மோடிக்குத்தான் இருக்கிறது. வலிமையாக நாட்டை நிர்வகிக்கும் திறமை மோடிக்குதான் உள்ளது. புல்வாமாவில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து குறுகிய காலத்திலேயே முயற்சி மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை கூண்டோடு அழிக்க நடவடிக்கை மேற்கொண்டவர் மோடி. சென்னையில் இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மோடி விரைவில் ஒப்புதல் தரவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். அதேபோல் கோதாவரி-காவிரி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும்  மோடியிடம் வைக்கிறேன்.

 

 

ஏழை தொழிலாளிகளுக்கு 2000 ரூபாய் வழங்குவதை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. ஏழை தொழிலாளிகளுக்கு 2000 ரூபாய் வழங்குவது தவறா? என கூறிய எடப்பாடி பழனிசாமி தமிழகம் செழிக்க மோடிக்கு வெற்றியை காணிக்கையாக கொடுப்போம் என கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்