Skip to main content

திமுக மூத்த தலைவர் ப.தா.முத்து மரணம்!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

சேலம் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், கட்சியின் முன்னோடிகளுள் ஒருவருமான பட்டணம் ப.தா.முத்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிகாலை வயது மூப்பினால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.

dmk senior leader incident

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ப.தா.முத்து, சேலம், நாமக்கல் ஆகியவை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார். மற்றொரு முக்கியத் தலைவராக இருந்த ஈ.ஆர்.கிருஷ்ணனுக்குப் பிறகு செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். 1968 முதல் 1974ம் ஆண்டு வரை தமிழக சட்டமேலவை உறுப்பினர் பதவியிலும் இருந்தார். திமுக தலைவர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடன் நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தார். 


''ப.தா.முத்து மாவட்டச் செயலாளராக இருந்தபோது, கட்சிக்கூட்டங்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சிப்பணிகளுக்காக சொந்த ஊரில் இருந்து சேலம் வந்தார் எனில், அப்போது சேலம் நகராட்சிக்குச் சொந்தமான விடுதியில்தான் தங்குவார். அப்போதைய நிலையில் ஒரு நாள் வாடகை 3 ரூபாய். மிகவும் எளிமையான மனிதராக கழகத் தொண்டர்களிடம் பழகக்கூடியவர். 


அவர் சேலத்தில் தங்கியிருக்கும்போது, தொண்டர்கள் யாரேனும் தங்க இடமின்றி தவித்தால், அவர்களையும் தன்னுடைய அறையிலேயே தங்க வைத்துக்கொள்வார். அந்தளவுக்கு பாரபட்சமின்றி தொண்டர்களிடம் நட்பு பாராட்டுவார். அவருக்குப் பிறகு அவருடைய வாரிசுகள் யாரும் நேரடி அரசியலுக்கு வரவில்லை. அவருடைய மறைவு, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கழகத்திற்கு பேரிழப்பு,'' என்கிறார்கள் திமுக முன்னோடிகள்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மனைவியைப் பிரிந்த கணவர் மரணம்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
husband who separated from his wife passed away

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (49). இவரது மனைவி தமிழ்செல்வி (39). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வெங்கடாசலம், மனைவி குழந்தைகளுடன் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே உள்ள பழையபாளையத்தில் வசித்து வந்தார். அவ்வப்போது கிடைக்கும் வேலைகளுக்கு சென்றுவந்த வெங்கடாசலத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தமிழ்ச்செல்வி தனது குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து சென்று கரூரில் தங்கி அங்குள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.  மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் மனவேதனையடைந்த வெங்கடாசலம் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு, வீட்டின் வெளியில் இருந்த கட்டிலில் பேச்சு மூச்சின்றி வெங்கடாசலம் கிடந்துள்ளார்.

இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே வெங்கடாசலம் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து, தமிழ்ச்செல்வி நேற்று அளித்த புகாரின் பேரில், அரச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

அப்பாவையே அடித்துக்கொன்ற மகன்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
The son who attacked his father, shocked in the investigation

சொத்துக்காக தந்தையை மகனும் மருமகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வம். பேருந்து ஓட்டுனரான செல்வத்தைக் காணவில்லை என அவருடைய மருமகள் சசிகா கடந்த மூன்றாம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக மகனும் மருமகனும் ஒன்று சேர்ந்து செல்வத்தை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

திருச்செங்கோடு அருகே திம்மராவுத்தம்பட்டி ஏரி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கொலை செய்த செல்வத்தின் உடலை புதைத்ததாக இருவரும் போலீசாருக்கு வாக்குமூலம் கொடுத்தனர். அதனடிப்படையில் அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார் செல்வத்தின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுத்து, உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செல்வத்தின் மகன், மருமகன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் என ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறு காரணமாக அப்பாவையே மகனும், மருமகனும் ஒன்று சேர்ந்து கொலை செய்தது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.