Skip to main content

மலைக் கிராம மாணவியின் கனவை நினைவாக்கிய தி.மு.க எம்.எல்.ஏ

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

DMK mla i senthilkumar helped girl study

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் வெள்ளகவி அடுத்து சின்னூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் மகாலட்சுமி பிளஸ் டூ முடித்துவிட்டு பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பித்தார். அதற்காக கவுன்சிலிங்கில் பங்கேற்ற அவருக்குத் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லாததால், படிக்க முடியாமல் பெற்றோருடன் கூலி வேலைக்குச் சென்று வந்தார். 

 

தேனி மாவட்டத்தில் உள்ள போடியில் பிளஸ் டூ வரை மாணவி மகாலட்சுமியை அவரது பெற்றோர் கூலி வேலை செய்து படிக்க வைத்தனர். பெற்றோரின் சிரமத்தை அறிந்து நன்றாகப் படித்து பிளஸ் டூ தேர்வு 470 மதிப்பெண்கள் எடுத்ததின் பேரில் உயர்கல்வி படிக்க மாணவி விரும்பினார். கிராமத்திற்குப் பாதை வசதி இல்லாததால் 3 காட்டாறுகள் கடந்து நடந்து செல்ல வேண்டும். இதனால் கர்ப்பிணிகள் நோயாளிகளை டோலி கட்டி ஆறு கிலோமீட்டர் வரை தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். அதனாலேயே கிராம மக்களுக்கு உதவி செய்ய பி.எஸ்.சி. நர்சிங் படிக்க நினைத்த மாணவிக்கு கவுன்சிலிங்கில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், அந்தக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படிக்க ஒன்றரை லட்சம் வரை செலவாகும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் கூலி வேலை செய்யும்  பெற்றோரால் அது இயலாத காரியம். ஏழ்மையால் உயர்கல்வி கனவு நிறைவேறாமல் மாணவி கூலி வேலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, அந்த மாணவி பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்குத் தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வந்தார்.

 

இந்த விஷயம் எம்.எல்.ஏ  ஐ.பி. செந்தில்குமாருக்குத் தெரிய வர உடனே மாணவி மகாலட்சுமியை போன் மூலம் தொடர்பு கொண்டு பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கான 4 ஆண்டுக்கான முழுக் கட்டணத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார். அதைக் கேட்டு மாணவியும் அவருடைய பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து, மறுநாளே அந்த மாணவியையும், பெற்றோரையும் பழனிக்கு வரச் சொல்லி உறுதி அளித்தார். அதுபோல் அந்த தனியார் கல்லூரி நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டு மாணவியை  உடனடியாகச் சேர்க்கவும் உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்