Skip to main content

நண்பனை கொன்றவர் மனம் மாறி ஆஜர்; கொலைக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? 

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

குடிபோதையில் நண்பனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட வாலிபர், மனசாட்சி உறுத்துவதாக கூறி தாமே முன்வந்து சரணடைந்துள்ளார்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்துள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர் விஸ்வநாதன். பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் முஸ்தாபா என்கிற மணிமாறன். மணிமாறனின் மனைவி ராகவி பிஇ பட்டதாரி, மணிமாறனும் ராகவியும் ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள். இருவரும் படிக்கும்போது காதலித்து ராகவியின் வீட்டை எதிர்த்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். வேலை இல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் இருக்கும் ராகவியை அடித்து துன்புறுத்துவதை பக்கத்து வீட்டில் இருக்கும் ராகவியின் பெற்றோர்களுக்கு கோபம் அதிகரித்துக்கொண்டே இருந்தது."இனி எங்களுக்கும் ராகவிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கிராமபஞ்சாயத்திலும், காவல்நிலையத்திலும் எழுதிக்கொடுத்திருந்ததால் மணிமாறனை எதிர்த்து பேசமுடியாத நிலையில் ராகவியின் பெற்றோர்கள் தவித்துக்கொண்டிருந்தனர்.

 

defeat incident in nagai...


இந்தநிலையில் விஸ்வநாதன் பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளான். ஊருக்கு வந்த அன்று இரவே மாணிமாறன் தனது வீட்டிற்கு அழைத்திருக்கிறார். நண்பன் அழைக்கிறானே என விசுவநாதனும் மதுபாட்டில்களோடு மணிமாறன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது மணிமாறனும் அவரது மனைவி ராகவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். 

விஸ்வநாதனை கண்டதும் மணிமாறன் ராகவியை உதைத்து கீழே தள்ளிவிட்டு விட்டு நண்பனோடு கொள்ளைபுறத்தில் அமர்ந்து மது அருந்தியிருக்கின்றனர், நள்ளிரவு நேரமாகியும் மணிமாறன் வீட்டிற்கு வரவில்லை. சண்டை போட்டுவிட்டு சென்றதால் ராகவியும் தேடவில்லை. மறுநாள் விடிந்ததும், மணிமாறன் தூக்கில் தொங்குவதாக கத்திக்கொண்டே விஸ்வநாதனை வரவழைத்து அவிழ்த்துக் கீழே போட்டுள்ளனர். இந்த விவகாரம் தெரு முழுவதும் தீயாக பரவ, மக்கள் கூடிவிட்டனர். பொங்கல் தினம் என்பதால் அந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமலும், காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்காமலும் மணிமாறனின் உடலை அடக்கம் செய்யாமல் எரித்துவிட்டனர்.

 

defeat incident in nagai...


இந்த சூழலில் நண்பனின் கொலை தன்மனதை உறுத்துவதாக கூறி எடுக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரியிடம், நான்தான் மணிமாறனை கொலை செய்தேன் என கூறி ஆஜராகியிருக்கிறான். இந்த விவகாரத்திற்கு பின்னால் இன்னும் ஒரு சிலர் இருப்பதாக பரபர்பாகிவருகிறது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், " எங்களுக்கு புகார் வரல, விஸ்வநாதன் ஆஜராகியதும் வழக்குப்போட்டிருக்கிறோம், ஆஜரான விஸ்வநாதன் அவனை மதுபாட்டிலால் மண்டையில் அடித்தேனே ஒழிய தூக்குப்போட்டது நான் இல்ல என கூறியிருக்கிறான்.

தூக்கிட்டு தொங்கிய மரத்தை ஆய்வுசெய்ததில் ஒருவர் தூக்கில் தொங்கவிட்டிருக்க முடியாது, ஆக மணிமாறனின் மனைவியின் உதவியோ, அல்லது விஸ்வநாதன் அடித்ததை பார்த்த ராகவியின் உறவினர்களோ இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்து விசாரித்துவருகிறோம்," என்கிறார்கள்.

மணிமாறனின் உறவினர்களோ," புருஷன் செத்துட்டானேன்னு துளி கண்ணீர்கூட விடல ராகவி. அவளோட உதவியோடதான் மணிமாறனை கன்னுருக்கனும், அதோட மணிமாறனை அழைத்துச்சென்ற விஸ்வநாதனையே அழைத்து தூக்கில் தொங்கியவனை அறுத்ததாக சொல்லுறாங்க, நாங்க ஒடிவந்து பார்க்கும்போது கீழேதான் கிடந்தான் கழுத்தில் கயத்தால் நெருக்கிய காயம் இருந்தது. ராகவியின் உடந்தையோடு நடந்திருக்கனும், அல்லது அவரது உறவினர் செய்திருக்கனும்,ராகவி விஸ்வநாதனுக்கு ஏதோ ஒருவகையில் இணங்க மறுத்ததால் ஆஜராகியிருக்கலாம். எப்படியோ இந்தகொலைக்கு பின்னால் ராகவியும் இருக்கிறார்," என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.